ஹதீஸ்கள்
#3917
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தந்தை) ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்து ஒட்டகச் சேணம் ஒன்றை விலைக்கு வாங்கினார்கள். நான் அவர்களுடன் அதைச் சுமந்து சென்றேன். ஆஸிப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ஹிஜ்ரத்) பயணம் குறித்து அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: எங்கள்மீது (எதிரிகளால்) கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆகவே, நாங்கள் இரவில் புறப்பட்டோம். நாங்கள் நண்பகல் நேரம் வரும்வரை இரவும் பகலும் கண் விழித்துப் பயணித்தோம். பிறகு எங்களுக் குப் பாறை ஒன்று தென்பட்டது. நாங்கள் அதனருகே சென்றோம். அதற்கு ஏதோ கொஞ்சம் நிழல் இருந்தது. நான் அல்லாஹ் வின் தூதருக்காக என்னுடன் இருந்த தோல் ஆடை ஒன்றை விரித்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் அதன்மீது படுத்துக் கொண்டார்கள். நான் அவர்களைச் சுற்றிலு மிருந்த புழுதியைத் தட்டிக்கொண்டே சென்றேன். அப்போது (தற்செயலாக) ஓர் ஆட்டிடையனைக் கண்டேன். அவன் தனது சிறிய ஆட்டு மந்தை ஒன்றுடன் நாங்கள் நாடிச் சென்ற (அதே பாறை நிழல்)தனை நாடி, அதை நோக்கி வந்துகொண்டிருந்தான். நான் அவனிடம், “இளைஞனே! நீ யாருடைய பணியாள்?” என்று கேட்டேன். அவன், “நான் இன்ன மனிதரின் பணியாள்” என்று சொன்னான். நான், “உன் ஆடுகளிடம் சிறிது பால் இருக்குமா?” என்று கேட்டேன். அவன், “ஆம்' என்றான். நான், “நீ (எங்களுக்குப்) பால் கறந்து தருவாயா?” என்று கேட்டேன். அவன், “ஆம் (தருகிறேன்)” என்றான். பின்னர், அவன் தன் ஆடுகளில் ஒன்றைப் பிடித்து வந்தான். நான் அவனிடம், “அதன் மடியை (புழுதி போக) உதறு” என்று சொன்னேன். பிறகு, அவன் சிறிது பாலைக் கறந்தான். என்னிடம் தண்ணீருள்ள தோல் பாத்திரம் ஒன்றிருந்தது. அதில் துண்டுத் துணியொன்று (மூடி) இருந்தது. அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் வைத்திருந் தேன். அதைப் பால் (பாத்திரத்தின்) மீது அதன் கீழ்ப்பகுதி குளிர்ந்து போகும்வரை ஊற்றினேன். பிறகு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்று, “பருகுங்கள், அல்லாஹ் வின் தூதரே!” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் திருப்தியடையும்வரை (அதை)ப் பருகினார்கள். பிறகு, எங்களைத் தேடிவந்தவர்கள் எங்கள் தடயத்தைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்க நாங்கள் புறப்பட்டோம்.165 அத்தியாயம் :
حدثنا احمد بن عثمان، حدثنا شريح بن مسلمة، حدثنا ابراهيم بن يوسف، عن ابيه، عن ابي اسحاق، قال سمعت البراء، يحدث قال ابتاع ابو بكر من عازب رحلا فحملته معه قال فساله عازب عن مسير رسول الله صلى الله عليه وسلم قال اخذ علينا بالرصد، فخرجنا ليلا، فاحثثنا ليلتنا ويومنا حتى قام قايم الظهيرة، ثم رفعت لنا صخرة، فاتيناها ولها شىء من ظل قال ففرشت لرسول الله صلى الله عليه وسلم فروة معي، ثم اضطجع عليها النبي صلى الله عليه وسلم فانطلقت انفض ما حوله، فاذا انا براع قد اقبل في غنيمة يريد من الصخرة مثل الذي اردنا فسالته لمن انت يا غلام فقال انا لفلان. فقلت له هل في غنمك من لبن قال نعم. قلت له هل انت حالب قال نعم. فاخذ شاة من غنمه فقلت له انفض الضرع. قال فحلب كثبة من لبن، ومعي اداوة من ماء عليها خرقة قد رواتها لرسول الله صلى الله عليه وسلم فصببت على اللبن حتى برد اسفله، ثم اتيت به النبي صلى الله عليه وسلم فقلت اشرب يا رسول الله. فشرب رسول الله صلى الله عليه وسلم حتى رضيت، ثم ارتحلنا والطلب في اثرنا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3917
- Book Index
- 142
Grades
- -
