ஹதீஸ்கள்
#3916
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் உங்கள் தந்தைக்கு முன்னதாக ஹிஜ்ரத் செய்துவந்தீர்கள்” என்று சொல்லப்படும்போது அவர்கள் கோப முற்றுக் கூறுவார்கள்: “நானும் (என் தந்தை) உமர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (“பைஅத்' எனும் உறுதிமொழி எடுத்துக்கொள்வதற் காகச்) சென்றோம். நபி (ஸல்) அவர்கள் மதிய ஓய்வெடுத்து (உறங்கி)க்கொண்டி ருக்கக் கண்டோம். ஆகவே நாங்கள் வீட்டிற்குத் திரும்பிவிட்டோம். பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னை அனுப்பி, “நீ போய், அவர்கள் (உறக்கத் திலிருந்து) விழித்தெழுந்துவிட்டார்களா என்று பார்” என்று சொன்னார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (அவர்கள் விழித்திருந்தார்கள். எனவே,) அவர்களிடம் உறுதிமொழி அளித்தேன். பிறகு உமர் (ரலி) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்கள் விழித்தெழுந்து விட்டார்கள் என்று தெரிவித்தேன். பிறகு நாங்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு விரைந்தோடிச் சென்றடைந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் உறுதிமொழி அளித்தார்கள். பிறகு நானும் (இரண்டாம் முறையாக) உறுதிமொழி அளித்தேன்.164 அத்தியாயம் :
حدثني محمد بن صباح او بلغني عنه حدثنا اسماعيل، عن عاصم، عن ابي عثمان، قال سمعت ابن عمر رضى الله عنهما اذا قيل له هاجر قبل ابيه يغضب، قال وقدمت انا وعمر على رسول الله صلى الله عليه وسلم فوجدناه قايلا فرجعنا الى المنزل، فارسلني عمر وقال اذهب فانظر هل استيقظ فاتيته، فدخلت عليه فبايعته، ثم انطلقت الى عمر، فاخبرته انه قد استيقظ، فانطلقنا اليه نهرول هرولة حتى دخل عليه فبايعه ثم بايعته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3916
- Book Index
- 141
Grades
- -
