ஹதீஸ்கள்
#3875
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது நாங்கள் அவர்களுக்கு சலாம் சொல்லுவோம். உடனே அவர்கள் எங்களுக்குப் பதில் சலாம் சொல்வார்கள். நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீ யிடமிருந்து திரும்பி வந்தபோது நபி (ஸல்) அவர்களுக்கு (அவர்கள் தொழுகை யிலிருக்கும்போது) சலாம் சொன்னோம். அப்போது அவர்கள் எங்களுக்குப் பதில் சலாம் சொல்லவில்லை. நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! (நீங்கள் தொழும் போது) நாங்கள் உங்களுக்கு சலாம் சொல்ல, நீங்களும் அதற்குப் பதில் சலாம் சொல்லிவந்தீர்களே” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “நிச்சயமாக! தொழுகை யில் கவனம் தேவைப்படுகிறது” என்று பதிலளித்தார்கள்.121 (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் (தமக்கு முந்திய அறிவிப் பாளரான) இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம், “(நீங்கள் தொழும்போது யாராவது சலாம் சொல்லிவிட்டால்) நீங்கள் எப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்ராஹீம் (ரஹ்) அவர்கள், “என் மனதுக்குள் நான் பதில் சலாம் சொல்லிவிடுகிறேன்” என்று சொன்னார். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3875
- Book Index
- 100
Grades
- -