ஹதீஸ்கள்
#3872
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்தி யகூஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம், “நீங்கள் உங்களுடைய (குலவழி) மாமா உஸ்மான் (ரலி) அவர்களி டம், அவர்களுடைய தாய்வழிச் சகோதரர் வலீத் பின் உக்பா பற்றிப் பேசாமலிருப்பது ஏன்? மக்கள் வலீதின் செயல்பாடுகள் குறித்து அதிகமாகக் குறை கூறுகிறார்களே!” என்று கேட்டார்கள். ஆகவே, நான் உஸ்மான் (ரலி) அவர்கள் தொழுகைக்காகப் புறப்பட்ட நேரத்தில் அவர்களுக்காகக் காத்திருந்தேன். அவர்களிடம், “எனக்கு உங்களிடம் சற்று(ப் பேச வேண்டிய) தேவை உள்ளது. அது (உங்க ளுக்கு நான் கூற விரும்பும்) அறிவுரை” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “மனிதரே! உம்மிடமிருந்து நான் அல்லாஹ் விடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று சொன்னார்கள். உடனே, நான் திரும்பி (அவ்விரு வரிடமும்) வந்தேன். நான் தொழுது முடித்தபோது மிஸ்வர் (ரலி) அவர்களுக்கும் இப்னு அப்தி யகூஸ் (ரஹ்) அவர்களுக்கும் அருகில் (சென்று) அமர்ந்து, உஸ்மான் (ரலி) அவர்களிடம் நான் (வலீத் பின் உக்பா விஷயமாகக்) கூறியதையும் அதற்கு அவர்கள் என்னிடம் சொன்ன பதிலையும் தெரிவித்தேன். அப்போது அவர்கள் இருவரும், “உங்கள் மீதிருந்த கடமையை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள். அவ்விருவருடனும் நான் அமர்ந்திருந்தபோது உஸ்மான் (ரலி) அவர்களுடைய தூதுவர் (என்னைத் தேடி) வர, அவ்விருவரும், “அல்லாஹ் உங்களைச் சோதனைக்குள்ளாக்கிவிட்டான்” என்று கூறினர். உடனே நான் (தூதுவருடன் புறப்பட்டு) உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றேன். உஸ்மான் (ரலி) அவர்கள், “நீங்கள் சற்றுமுன் கூறி(ட விரும்பி)ய உங்கள் அறிவுரை என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நான் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறி (இறைவனைப் புகழ்ந்து விட்டு), “அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களை (சத்திய மார்க்கத்துடன்) அனுப்பி அவர்களுக்கு இறை வேதத்தை யும் அருளினான். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் அழைப்புக்குப் பதிலளித்து அவர்கள்மீது நம்பிக்கை கொண்டவர்களில் நீங்களும் ஒருவராயிருந்தீர்கள். மேலும், முதல் இரண்டு ஹிஜ்ரத்துகளை மேற்கொண்டீர் கள்.116 நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டு அவர்களின் வழிமுறையைப் பார்த்திருக்கிறீர்கள். மக்களோ வலீத் பின் உக்பாவைப் பற்றி நிறைய குறைபேசுகிறார்கள். எனவே, அவரை (இஸ்லாமியச் சட்டப்படி) தண்டிப்பது உங்கள்மீது கடமையாகிவிட்டது” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்க நான், “இல்லை. ஆனால், திரைக்கப்பால் இருக்கும் கன்னிப் பெண்களிடம்(கூட) அல்லாஹ்வின் தூதருடைய கல்வி சென்றடைந்துகொண்டிருக்கும்(போது, அந்த) அளவு கல்வி என்னிடமும் வந்து சேர்ந்துள்ளது (குறித்து வியப்பில்லை)” என்று பதில் சொன்னேன். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி, “அல்லாஹ் முஹம்மத் (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பி அவர்களுக்கு வேதத்தையும் அருளினான். அப்போது, அல்லாஹ்வின் அழைப்புக்கும் அல்லாஹ்வின் தூதருடைய அழைப்புக் கும் பதிலளித்தவர்களில் நானும் ஒருவ னாயிருந்தேன். மேலும், அவர்கள் எந்த வேதத்தைக் கொடுத்தனுப்பப்பட்டார்களோ அதை நான் நம்பி ஏற்றுக்கொண்டேன். நான் முதல் இரண்டு ஹிஜ்ரத்துகளையும் மேற்கொண்டேன். -நீங்கள் சொன்னதைப் போல்- நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தோழமை கொண்டேன்; அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். ஆகவே, அல்லாஹ்வின் மீதாணை யாக! அவர்களை அல்லாஹ் இறக்கச் செய்யும்வரை நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவு மில்லை. பிறகு அல்லாஹ் அபூபக்ர் (ரலி) அவர்களை கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கினான். அல்லாஹ்வின் மீதாணை யாக! நான் அவர்களுக்கு மாறு செய்யவு மில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவர்களுக்கு மாறு செய்யவுமில்லை; அவர்களை ஏமாற்றவுமில்லை. பிறகு நான் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டேன். ஆகவே, என் விஷயத்தில் அவர்களுக்கிருந்தது போன்ற அதே உரிமை உங்கள் விஷயத்தில் எனக்கில்லையா?” என்று கேட்டார்கள். நான், “ஆம் (உங்களுக்கும் அதே போன்ற உரிமை இருக்கின்றது)” என்றேன். அவர்கள், “அப்படியென்றால் உங்களைக் குறித்து எனக்கு எட்டுகின்ற (என்னைக் குறைகூறும்) இந்தப் பேச்சுகளெல்லாம் என்ன? நீங்கள் வலீத் பின் உக்பா தொடர்பாகச் சொன்னவற்றில் இறைவன் நாடினால் விரைவில் நான் சரியான நடவடிக்கையை எடுப்பேன்” என்று சொன்னார்கள். பிறகு வலீத் பின் உக்பாவுக்கு (எதி ராகச் சாட்சிகள் கிடைத்ததால் அவருக்கு) நாற்பது சாட்டையடிகள் தண்டனையாக அறிவித்து, அவருக்குச் சாட்டையடிகள் கொடுக்கும்படி அலீ (ரலி) அவர்களுக்கு உஸ்மான் (ரலி) அவர்கள் உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள்தான் வலீதுக்குச் சாட்டையடி வழங்கினார்கள்.117 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரண்டில் “அவர்களுக்கு இருந்ததைப் போன்ற உரிமை உங்கள்மீது எனக்கில் லையா? என இடம்பெற்றுள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: இங்கு “அல்லாஹ் உங்களைச் சோதனைக்குள்ளாக்கி விட்டான்' என்பதைக் குறிக்க மூலத்தில் “பலாஉ' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு “சோதனை' எனும் பொருள் இருப்பதைப் போன்றே, “அருட்கொடை' எனும் பொருளும் உண்டு. அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد الجعفي، حدثنا هشام، اخبرنا معمر، عن الزهري، حدثنا عروة بن الزبير، ان عبيد الله بن عدي بن الخيار، اخبره ان المسور بن مخرمة وعبد الرحمن بن الاسود بن عبد يغوث قالا له ما يمنعك ان تكلم خالك عثمان في اخيه الوليد بن عقبة وكان اكثر الناس فيما فعل به. قال عبيد الله فانتصبت لعثمان حين خرج الى الصلاة فقلت له ان لي اليك حاجة وهى نصيحة. فقال ايها المرء، اعوذ بالله منك، فانصرفت، فلما قضيت الصلاة جلست الى المسور والى ابن عبد يغوث، فحدثتهما بالذي قلت لعثمان وقال لي. فقالا قد قضيت الذي كان عليك. فبينما انا جالس معهما، اذ جاءني رسول عثمان، فقالا لي قد ابتلاك الله. فانطلقت حتى دخلت عليه، فقال ما نصيحتك التي ذكرت انفا قال فتشهدت ثم قلت ان الله بعث محمدا صلى الله عليه وسلم وانزل عليه الكتاب، وكنت ممن استجاب لله ورسوله صلى الله عليه وسلم وامنت به، وهاجرت الهجرتين الاوليين، وصحبت رسول الله صلى الله عليه وسلم ورايت هديه، وقد اكثر الناس في شان الوليد بن عقبة، فحق عليك ان تقيم عليه الحد. فقال لي يا ابن اخي ادركت رسول الله صلى الله عليه وسلم قال قلت لا، ولكن قد خلص الى من علمه ما خلص الى العذراء في سترها. قال فتشهد عثمان فقال ان الله قد بعث محمدا صلى الله عليه وسلم بالحق وانزل عليه الكتاب، وكنت ممن استجاب لله ورسوله صلى الله عليه وسلم وامنت بما بعث به محمد صلى الله عليه وسلم. وهاجرت الهجرتين الاوليين كما قلت، وصحبت رسول الله صلى الله عليه وسلم وبايعته، والله ما عصيته ولا غششته حتى توفاه الله، ثم استخلف الله ابا بكر فوالله ما عصيته ولا غششته، ثم استخلف عمر، فوالله ما عصيته ولا غششته، ثم استخلفت، افليس لي عليكم مثل الذي كان لهم على قال بلى. قال فما هذه الاحاديث التي تبلغني عنكم فاما ما ذكرت من شان الوليد بن عقبة، فسناخذ فيه ان شاء الله بالحق قال فجلد الوليد اربعين جلدة، وامر عليا ان يجلده، وكان هو يجلده. وقال يونس وابن اخي الزهري عن الزهري افليس لي عليكم من الحق مثل الذي كان لهم. قال ابو عبد الله بلاء من ربكم ما ابتليتم به من شدة وفي موضع البلاء الابتلاء والتمحيص من بلوته ومحصته اي استخرجت ما عنده يبلو يختبر مبتليكم مختبركم واما قوله بلاء عظيم النعم وهي من ابليته وتلك من ابتليته
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3872
- Book Index
- 97
Grades
- -
