ஹதீஸ்கள்
#3865
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது மக்கள் அவர்களுடைய வீட்டருகே ஒன்றுதிரண்டு, “உமர் மதம் மாறிவிட்டார்” என்று சொல்லலானார்கள். - அப்போது சிறுவயதினனாக இருந்த நான் என் வீட்டுக் கூரைமீது அமர்ந்து கொண்டிருந்தேன் - அப்போது ஒரு மனிதர் பட்டு அங்கி ஒன்றை அணிந்து கொண்டு வந்து, “உமர் மதம் மாறிவிட்டார். அதனால் என்ன? நான் அவருக்கு அபயம் அளித்திருக்கிறேன் (ஆகவே, அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது)” என்று சொன்னார். மக்கள் (அவர் சொன்னதைக் கேட்டு) அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டதைப் பார்த்தேன். நான், “யார் இவர்?” என்று கேட்டேன். மக்கள், “(இவர்தான்) ஆஸ் பின் வாயில்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3865
- Book Index
- 90
Grades
- -