ஹதீஸ்கள்
#3864
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் தம்மை குறைஷியர் கொல்ல வருவார்கள் என்று) அஞ்சியவர்களாக(த் தமது) இல்லத்தினுள் அவர்கள் இருந்தபோது, ஆஸ் பின் வாயில் அஸ்ஸஹ்மீ அபூஅம்ர் (எனும் குறைஷித் தலைவர்)107 கோடு போட்ட சால்வை ஒன்றைப் போட்டுக்கொண்டு பட்டினால் தைக்கப்பட்ட சட்டையொன்றை அணிந்து கொண்டு வந்து, “என்ன விஷயம்?” என்று கேட்டார் - அவர் அறியாமைக் காலத்தில் எங்கள் நட்புக் குலமாயிருந்த “பனூ சஹ்ம்' குலத்தைச் சேர்ந்தவர் - உமர் அவர்கள், “உங்கள் குலத்தார் நான் இஸ்லாத்தை ஏற்றதற்காக என்னைக் கொல்ல எண்ணு கிறார்கள்” என்று அவரிடம் சொன்னார்கள். அதற்கு அவர், “உம்மிடம் (நெருங்க அவர்களுக்கு) வழியில்லை” என்று சொன்னார். (உமர் (ரலி) கூறுகிறார்கள்:) இவ்வாறு அவர் சொன்ன பிறகு நான் அமைதியடைந் தேன். உடனே, “ஆஸ் பின் வாயில்' வெளியே சென்று (மக்கா) பள்ளத்தாக்கே நிரம்பி வழியும்படி திரண்டு நின்ற மக்களைச் சந்தித்து, “நீங்கள் எங்கே நாடிப் போகிறீர்கள்?” என்று கேட்டார். அவர்கள், “மதம் மாறி (நமக்குத் துரோகம் செய்து) விட்ட இந்த கத்தாபின் மகனைத்தான் நாடிச் செல்கிறோம்” என்று பதிலளித்தார் கள். அதற்கு அவர், “அவரிடம் (நெருங்க உங்களுக்கு) வழியில்லை” என்று சொல்ல, (வேறு வழியின்றி) மக்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். அத்தியாயம் :
حدثنا يحيى بن سليمان، قال حدثني ابن وهب، قال حدثني عمر بن محمد، قال فاخبرني جدي، زيد بن عبد الله بن عمر عن ابيه، قال بينما هو في الدار خايفا، اذ جاءه العاص بن وايل السهمي ابو عمرو، عليه حلة حبرة، وقميص مكفوف بحرير، وهو من بني سهم، وهم حلفاونا في الجاهلية فقال له ما بالك قال زعم قومك انهم سيقتلوني ان اسلمت. قال لا سبيل اليك. بعد ان قالها امنت، فخرج العاص، فلقي الناس قد سال بهم الوادي فقال اين تريدون فقالوا نريد هذا ابن الخطاب الذي صبا. قال لا سبيل اليه. فكر الناس
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3864
- Book Index
- 89
Grades
- -
