ஹதீஸ்கள்
#3861
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூதர் (அல்கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோது தம் சகோதரரிடம், “இந்த (மக்கா) பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்து, “வானத்திலிருந்து (இறைச்)செய்தி தம்மிடம் வருகின்ற ஓர் இறைத்தூதர்' என்று தம்மை வாதிடுகின்ற இந்த மனிதரைக் குறித்த விவரத்தை (திரட்டி) என்னிடம் சொல்! அவரது சொல்லைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பிறகு என்னிடம் வா!” என்று சொன்னார்கள். உடனே அச்சகோதரர் புறப்பட்டுச் சென்று நபி (ஸல்) அவர்களை அடைந்து அவர்களின் சொல்லைக் கேட்டார். பிறகு அபூதர்ரிடம் திரும்பிச் சென்று, “அவர் நற்குணங்களைக் கடைபிடிக்கும்படி (மக்களுக்குக்) கட்டளையிடுவதை நான் பார்த்தேன். ஒரு வாக்கையும் (செவியுற் றேன்). அது கவிதையாக இல்லை” என்று சொன்னார். அபூதர், “நான் விரும்பியதை நீ திருப்திகரமாகச் செய்யவில்லை” என்று கூறிவிட்டு, பயண உணவை எடுத்துக் கொண்டு, நீர் நிரம்பிய தனது தோல்பை ஒன்றைச் சுமந்துகொண்டு புறப்பட்டார். மக்காவை வந்தடைந்து (கஅபா) பள்ளிவாசலுக்குச் சென்றார். நபி (ஸல்) அவர்களை அவர் அறியாதவராயிருந்த காரணத்தால் அவர்களைத் தேடினார். (அங்கிருந்த குறைஷியர் தமக்குத் தொல்லை தரக்கூடும் என்பதால் அவர்களிடம்) நபியவர்களைப் பற்றிக் கேட்க அவர் விரும்பவில்லை. இரவில் சிறிது நேரம் கழிந்துவிட்டது. அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கண்டு, அவர் அந்நியர் என்று புரிந்து கொண்டார்கள். அலீயைக் கண்டவுடன் (அலீ (ரலி) அவர்கள் அபூதர்ரிடம், “வீட்டுக்கு வாருங்கள்” என்று சொல்ல) அவர்களைப் பின்தொடர்ந்து அபூதர் சென்றார். விடியும்வரை அவர்களில் ஒருவரும் (தம்முடனிருந்த) மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக்கொள்ளவில்லை. பிறகு அபூதர் தம் தோல்பையையும் தம் பயண உணவையும் சுமந்துகொண்டு பள்ளிவாசலுக்குச் சென்றார். அன்று மாலையாகும்வரை நபி (ஸல்) அவர்கள் தம்மைப் பார்க்காத நிலையிலேயே அன்றைய பகலைக் கழித்தார். பிறகு (மாலையானதும்) தம் படுக்கைக்குத் திரும்பினார். அப்போது அலீ (ரலி) அவர்கள் அவரைக் கடந்து சென்றார்கள். “தம் தங்குமிடத்தை அறிந்துகொள்ள இந்த மனிதருக்கு இன்னும் வேளை வரவில்லையா?” என்று கேட்டுவிட்டு அவரை(ப் படுக்கையிலிருந்து) எழுப்பித் தம்முடன் அழைத்துச் சென்றார்கள். அவ்விருவரும் ஒருவர் மற்றவரிடம் எதைப் பற்றியும் கேட்டுக்கொள்ளவில்லை. இறுதியில் மூன்றாம் நாள் வந்தபோது அலீ (ரலி) அவர்கள் அதே போன்று திரும்பச் செய்தார்கள். தம்முடன் அவரைத் தங்கவைத்துக்கொண்டு பிறகு, (அபூதர்ரிடம்), “நீங்கள் எதற்காக (இங்கே) வந்தீர்கள் என்று எனக்குச் சொல்லக் கூடாதா?” என்று கேட்டார்கள். அவர், “(நான் விரும்பி வந்ததை அடைய) எனக்குச் சரியான வழிகாட்டுவதற்கு நீங்கள் உறுதிமொழியளித்தால் நான் (எதற்காக வந்தேன் என்று சொல்லச்) செய்கிறேன்” என்று பதிலளித்தார். அலீ (ரலி) அவர்களும் அவ்வாறே உறுதிமொழி யளிக்க, அபூதர் (தாம் வந்த காரணத்தை) அவர்களுக்குத் தெரிவித்தார். அலீ (ரலி) அவர்கள், “அவர்கள் உண்மையானவர்களே! அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான். காலையானதும் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வாருங் கள். நான் உங்களுக்குத் தீங்கு நேரும் என்று அஞ்சுகின்ற எதையாவது கண்டால் தண்ணீர் ஊற்றுவதைப் போன்று நின்றுகொள்வேன்.103 நான் போய்க் கொண்டேயிருந்தால் நான் நுழைய வேண்டிய இடத்தில் நுழையும்வரை என்னைப் பின்தொடருங்கள்” என்று சொன்னார்கள். அபூதர்ரும் அவ்வாறே செய்தார். அலீ அவர்களைப் பின்தொடர்ந்து நடந்தார். இறுதியில், அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த வீட்டில் நுழைந்தபோது அவர்களுடன் அவரும் நுழைந்தார். நபி (ஸல்) அவர்களின் சொல்லைக் கேட்டு அதே இடத்தில் இஸ்லாத்தை ஏற்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நீங்கள் உங்கள் (ஃகிஃபார்) சமுதாயத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்து சேரும்வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்” என்று சொன்னார்கள். அபூதர், “என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் இந்தச் செய்தியை (இறைமறுப்பாளர்களான) அவர்களிடையே உரக்கக் கூவிச் சொல்வேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறி, பள்ளி வாசலுக்கு வந்து, உரத்த குரலில், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதி கூறுகிறேன்” என்று சொன்னார். உடனே, அங்கிருந்த (இறைமறுப்பாளர்களின்) கூட்டத்தார் எழுந்து அவருக்கு வலி ஏற்படும் அளவுக்கு அவரை அடித் தார்கள். அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்து, அவர்மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க்கொண்டார்கள். “உங்களுக்குக் கேடு உண்டாகட்டும். இவர் கிஃபார் குலத்தைச் சேர்ந்தவர் என்பதும், உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (ஃகிஃபார் குலத்தாரின் ஆதிக்கத்திற்குட் பட்ட) ஷாம் நாட்டுப் பாதையில்தான் உள்ளது என்பதும், உங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர்ரைக் காப்பாற்றினார்கள். அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அபூதர் அதேபோன்று செய்ய குறைஷியரும் அடித்தபடி அவர்மீது பாய்ந்தார்கள். உடனே (முன்பு போலவே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர்ரின் மீது கவிழ்ந்து படுத்துக் கொண்டார்கள்.104 அத்தியாயம் :
حدثني عمرو بن عباس، حدثنا عبد الرحمن بن مهدي، حدثنا المثنى، عن ابي جمرة، عن ابن عباس رضى الله عنهما قال لما بلغ ابا ذر مبعث النبي صلى الله عليه وسلم قال لاخيه اركب الى هذا الوادي، فاعلم لي علم هذا الرجل الذي يزعم انه نبي، ياتيه الخبر من السماء، واسمع من قوله، ثم ايتني. فانطلق الاخ حتى قدمه وسمع من قوله، ثم رجع الى ابي ذر، فقال له رايته يامر بمكارم الاخلاق، وكلاما ما هو بالشعر. فقال ما شفيتني مما اردت، فتزود وحمل شنة له فيها ماء حتى قدم مكة، فاتى المسجد، فالتمس النبي صلى الله عليه وسلم ولا يعرفه، وكره ان يسال عنه حتى ادركه بعض الليل، فراه علي فعرف انه غريب. فلما راه تبعه، فلم يسال واحد منهما صاحبه عن شىء حتى اصبح، ثم احتمل قربته وزاده الى المسجد، وظل ذلك اليوم ولا يراه النبي صلى الله عليه وسلم حتى امسى، فعاد الى مضجعه، فمر به علي فقال اما نال للرجل ان يعلم منزله فاقامه، فذهب به معه لا يسال واحد منهما صاحبه عن شىء، حتى اذا كان يوم الثالث، فعاد علي مثل ذلك، فاقام معه ثم قال الا تحدثني ما الذي اقدمك قال ان اعطيتني عهدا وميثاقا لترشدنني فعلت ففعل فاخبره. قال فانه حق وهو رسول الله صلى الله عليه وسلم، فاذا اصبحت فاتبعني، فاني ان رايت شييا اخاف عليك قمت كاني اريق الماء، فان مضيت فاتبعني حتى تدخل مدخلي. ففعل، فانطلق يقفوه حتى دخل على النبي صلى الله عليه وسلم ودخل معه، فسمع من قوله، واسلم مكانه فقال له النبي صلى الله عليه وسلم " ارجع الى قومك، فاخبرهم حتى ياتيك امري ". قال والذي نفسي بيده لاصرخن بها بين ظهرانيهم، فخرج حتى اتى المسجد فنادى باعلى صوته اشهد ان لا اله الا الله، وان محمدا رسول الله. ثم قام القوم فضربوه حتى اضجعوه، واتى العباس فاكب عليه قال ويلكم الستم تعلمون انه من غفار وان طريق تجاركم الى الشام فانقذه منهم، ثم عاد من الغد لمثلها، فضربوه وثاروا اليه، فاكب العباس عليه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3861
- Book Index
- 86
Grades
- -
