ஹதீஸ்கள்
#3853
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) “அந்நஜ்ம்' எனும் (53ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) பிறகு (இறுதியில் ஓதலுக்குரிய) சஜ்தா செய்தார்கள். அப்போது (அங்கிருந்த) யாவரும் சிரவணக்கம் செய்யாமல் இருக்கவில்லை; ஒரேயொரு மனிதரைத் தவிர. அவர் (தரையில் சிரம்பணியாமல்) ஒரு கைப்பிடியளவு சிறு கூழாங்கற்களை எடுத்து (முகத்தருகே) உயர்த்தி (அப்படியே) அதன்மீது சஜ்தா செய்து, “இது எனக்குப் போதும்” என்று சொல்லிக்கொண்டிருந்ததை நான் கண்டேன். பின்னால், அவர் அல்லாஹ்வை மறுத்தவராகக் கொல்லப்பட்டதையும் நான் பார்த்தேன்.89 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن ابي اسحاق، عن الاسود، عن عبد الله رضى الله عنه قال قرا النبي صلى الله عليه وسلم النجم، فسجد فما بقي احد الا سجد، الا رجل رايته اخذ كفا من حصا فرفعه فسجد عليه وقال هذا يكفيني. فلقد رايته بعد قتل كافرا بالله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3853
- Book Index
- 78
Grades
- -
