ஹதீஸ்கள்
#3848
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அபுஸ்ஸஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “மக்களே! நான் உங்களுக்குச் சொல்வதை என்னிடமிருந்து (காது கொடுத்துக் கவன மாகக்) கேளுங்கள். நீங்கள் சொல்வதை நான் (கவனமாகக்) கேட்க விடுங்கள். (என்னிடமிருந்து அரைகுறையாகக் கேட்டுக்கொண்டு)போய், “இப்னு அப்பாஸ் சொன்னார்; இப்னு அப்பாஸ் சொன்னார்” என்று (தப்பும் தவறுமாகச்) சொல்லாதீர்கள். இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருபவர் “ஹிஜ்ர்' எனும் (வளைந்த) பகுதிக்கு அப்பாலிருந்து சுற்றட்டும்! “அல்ஹத்தீம்' என்று (அதற்குப்) பெயர் சொல்லாதீர்கள். ஏனெனில், அறியாமைக் காலத்தில் ஒரு மனிதர் சத்தியம் செய்துவிட்டு (சத்தியம் செய்ததற்கு அடையாளமாக) தமது சாட்டையையோ, தமது செருப் பையோ, தமது வில்லையோ அங்கே போட்டுவிடுவார் (அதனால்தான் அதற்கு “ஹத்தீம்' (வீழ்த்தக் கூடியது) என்ற பெயர் வந்தது)” என்று சொல்வதை நான் கேட்டேன். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد الجعفي، حدثنا سفيان، اخبرنا مطرف، سمعت ابا السفر، يقول سمعت ابن عباس رضى الله عنهما يقول يا ايها الناس، اسمعوا مني ما اقول لكم، واسمعوني ما تقولون، ولا تذهبوا فتقولوا قال ابن عباس، قال ابن عباس من طاف بالبيت فليطف من وراء الحجر، ولا تقولوا الحطيم، فان الرجل في الجاهلية كان يحلف فيلقي سوطه او نعله او قوسه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3848
- Book Index
- 73
Grades
- -
