ஹதீஸ்கள்
#3835
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஓர் அரபுக் கோத்திரத்திற்குச் சொந்த மான கறுப்பு (நிற அடிமைப்) பெண் ஒருத்தி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாள். அவளுக்குப் பள்ளிவாசலில் சிறிய (தங்கும்) அறையொன்று இருந்தது. அவள் எங்களிடம் வந்து பேசிக்கொண்டி ருப்பாள். அவள் பேசி முடிக்கும்போது, “அரை யணித் தோள்பட்டிகை72 (காணாமற் போன) நாள் எம் இறைவனின் விந்தை களில் ஒன்றாகும். அந்த நாள் இறைமறுப்பு (மேலோங்கி) இருந்த ஊரிலிருந்து என்னை (வெளியேற்றிக்) காப்பாற்றிவிட்டது” என்று பாடுவாள். இவ்வாறு அவள் அதிகமாகப் பாடுவதைக் கேட்ட நான், “அரையணித் தோள்பட்டிகை நாள் என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவள் சொன்னாள்: என் (எஜமானியர்) குடும்பத்தாரில் ஒருவருக்குரிய சிறுமி ஒருத்தி (மணப் பெண்ணாக இருந்ததால்) பதனிடப்பட்ட தோலால் ஆன (சிவப்பு) அரையணித் தோள்பட்டிகை ஒன்றை அணிந்து கொண்டு (குளியலறைக்குச்) சென்றாள். அப்போது அந்தப் பட்டிகை (எதிர்பாராத விதமாக) அவளிடமிருந்து (கழன்று) விழுந்துவிட, அதைப் பருந்து ஒன்று இறைச்சி என்று நினைத்துக் கவ்வி எடுத்துச் சென்றுவிட்டது. (என் எஜமானர்கள் நான்தான் அதைத் திருடினேன் என்று) என்மீது குற்றம் சாட்டி என்னைச் சித்திரவதை செய்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்கள் என் பிறவி உறுப்பையும் சோதனையிட்டார்கள். அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்க, நான் கடும் வேதனையில் (துடித்தபடி) இருந்தபோது, அந்தப் பருந்து எங்கள் தலைகளுக்கு நேராக வந்து அந்தப் பட்டிகையை(க் கீழே) போட்டது. உடனே அதை அவர்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது நான் அவர்களிடம், “நான் குற்றமற்றவளாயிருக்க, நான் திருடிவிட் டதாக நீங்கள் குற்றம் சாட்டினீர்களே அந்தப் பட்டிகைதான் இது” என்று சொன்னேன்.73 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3835
- Book Index
- 60
Grades
- -