ஹதீஸ்கள்
#3832
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஹஜ்ஜுடைய மாதங்களில் (ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும்; அம்மாதங் களில்) உம்ரா செய்வது பூமியில் நடக்கும் பாவகரமான செயல்களில் ஒன்று' என (அறியாமைக் கால) மக்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். (போரிடுவது தடை செய்யப்பட்ட நான்கு மாதங்களில் துல்கஅதா, துல்ஹிஜ்ஜா, முஹர்ரம் ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து வந்ததால் சலிப்புற்று முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபர் மாதத்திற்கு மாற்றி) ஸஃபருக்கு “முஹர்ரம்' என்று பெயர் சூட்டிவந்தார்கள். “(ஹஜ் பயணத்துக்கான சுமையைச் சுமந்த ஒட்டகங்களின் முதுகில்) வடு மறைந்து காலடித்தடங்கள் அழிந்து ஸஃபர் மாதம் கழிந்தால் உம்ரா செய்யலாம்; உம்ரா செய்பவர்” என்று கூறிவந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹிஜ்ஜா மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொண்டு (மதீனாவிலிருந்து) மக்கா நகருக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், மக்கள் தம் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்டளை யிட்டார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிóருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” எனக் கேட்டனர். அதற்கு, “(இஹ்ராம் கட்டிய வருக்கு விலக்கப்பட்டிருந்த) அனைத்து செயல்களும் அனுமதிக்கப்படும்”70 என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3832
- Book Index
- 57
Grades
- -