ஹதீஸ்கள்
#3828
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்கள் (நபித்துவக் காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, “குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்களில் எவரும் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின் படி நடக்கவில்லை” என்று சொல்லிக் கொண்டி ருந்ததை நான் பார்த்தேன். மேலும், அவர், உயிரோடு புதைக்கப் படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்துவந்தார். எவரேனும் தம் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், “அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக்கொள்வார். அவள் வளர்ந்ததும் அவளுடைய தந்தையிடம் (சென்று), “நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்துவிடுகிறேன்; நீ விரும்பினால் அவளது செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்து)க்கொள்கிறேன்” என்று சொல்வார். அத்தியாயம் :
وقال الليث كتب الى هشام عن ابيه، عن اسماء بنت ابي بكر رضى الله عنهما قالت رايت زيد بن عمرو بن نفيل قايما مسندا ظهره الى الكعبة يقول يا معاشر قريش، والله ما منكم على دين ابراهيم غيري، وكان يحيي الموءودة، يقول للرجل اذا اراد ان يقتل ابنته لا تقتلها، انا اكفيكها ميونتها. فياخذها فاذا ترعرعت قال لابيها ان شيت دفعتها اليك، وان شيت كفيتك ميونتها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3828
- Book Index
- 53
Grades
- -
