ஹதீஸ்கள்
#3825
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்களிடம்) வந்து, “அல்லாஹ் வின் தூதரே! (நான் இஸ்லாத்தை எதிர்த்து வந்தபொழுது) பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் இழிவடைவதையும் விட உங்கள் வீட்டார் இழிவடைவதே எனக்கு மிகவும் விருப்பமானதாக இருந்து வந்தது. (நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட) பிறகு இன்று பூமியின் முதுகிலுள்ள வேறெந்த வீட்டார் கண்ணியம் பெறுவதையும்விட உங்கள் வீட்டார் கண்ணியம் பெறுவதே எனக்கு அதிக விருப்பமானதாக மாறிவிட்டது” என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், “என் உயிரைக் தன் கையில் வைத்திருப்பவன்மீது சத்தியமாக! (இந்த உனது விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)” என்று பதிலளித்தார்கள். ஹின்த் பின்த் உத்பா, “அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூசுஃப்யான் மிகவும் கையிருக்கமான மனிதர். ஆகவே, அவருக்குரிய பணத்திலிருந்து (அவருக்குத் தெரியாமல் எடுத்து) எங்கள் பிள்ளை குட்டிகளுக்கு நான் உண்ணக் கொடுத்தால் என்மீது குற்றமாகுமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நியாயமான அளவுக்கு எடுத்(து உண்ணக் கொடுத்)தால் குற்றமில்லை” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3825
- Book Index
- 50
Grades
- -