ஹதீஸ்கள்
#3823
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அறியாமைக் காலத்தில் “துல்கலஸா'55 எனும் ஆலயம் ஒன்று இருந்தது. அது “யமன் நாட்டு கஅபா' அல்லது “ஷாம் நாட்டு கஅபா'56 என்று அழைக்கப்பட்டு வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “துல்கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீ விடுவித்து விடுவாயா?” என்று கேட்டார்கள். ஆகவே நான் “அஹ்மஸ்' எனும் (என்) குலத்தாரிலிருந்து நூற்று ஐம்பது குதிரை வீரர்களுடன் அதை நோக்கிப் புறப்பட்டேன். அதை நாங்கள் உடைத்துவிட்டோம். அதனருகே இருந்த (பகை)வர்களை நாங்கள் கொன்றுவிட்டோம்.57 பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்து விவரத்தைத் தெரிவித்தோம். அப்போது, நபி (ஸல்) அவர்கள் எங்களுக்காகவும் “அஹ்மஸ்' குலத்தாருக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள்.58 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3823
- Book Index
- 48
Grades
- -