ஹதீஸ்கள்
#3817
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: கதீஜா (ரலி) அவர்களின் மீது நான் ரோஷப்பட்டதைப் போன்று வேறெந்தப் பெண்ணின் மீதும் ரோஷப்பட்டதில்லை. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரை அதிகமாக நினைவு கூர்ந்து (பாராட்டிப் பேசி)வந்தார்கள். கதீஜா அவர்கள் இறந்து மூன்றாண்டுகள் கழித்து நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். கதீஜா (ரலி) அவர்களுக்கு சொர்க்கத் தில் முத்து மாளிகை ஒன்று கொடுக்கப்படும் என்று அவர்களுக்கு நற்செய்தி கூறும்படி நபியவர்களுக்கு அவர்களின் “இறைவன் கட்டளையிட்டான்' அல்லது “(இவ்வாறு நற்செய்தி சொல்லும்படி இறைவன் கட்டளையிட்டதை) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்னார்கள்'. அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا حميد بن عبد الرحمن، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت ما غرت على امراة ما غرت على خديجة، من كثرة ذكر رسول الله صلى الله عليه وسلم اياها. قالت وتزوجني بعدها بثلاث سنين، وامره ربه عز وجل او جبريل عليه السلام ان يبشرها ببيت في الجنة من قصب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3817
- Book Index
- 42
Grades
- -
