ஹதீஸ்கள்
#3814
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அபூபுர்தா ஆமிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் மதீனாவுக்கு வந்து அப்துல்லாஹ் பின் சலாம் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் (என்னிடம்), “நீங்கள் (என்னுடன்) வரமாட்டீர்களா? உங்களுக்கு நான் மாவையும் பேரீச்சம் பழத்தையும் உண்ணத் தருவேன். நீங்கள் (நபி (ஸல்) அவர்கள் வருகை தந்த என்) வீட்டிற்கு வந்ததாகவும் இருக்குமே” என்று கேட்டார்கள். பிறகு, “நீங்கள் வட்டி மலிந்துள்ள (இராக்) நாட்டில் வசிக்கிறீர்கள். உங்களுக்கு ஒருவர் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்து, அவர் ஒரு வைக்கோல் போரையோ, தொலிநீக்கப்படாத கோதுமை மூட்டையையோ, கால்நடைத் தீவன மூட்டையையோ அன்பளிப்பாகக் கொடுத் தாலும் அதுவும் வட்டியாகும்” (அதைத் தவிர்ப்பதே நல்லது) என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சில தொடர்களில் “(என்) வீட்டிற்கு' எனும் சொல் இடம்பெறவில்லை. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3814
- Book Index
- 39
Grades
- -