ஹதீஸ்கள்
#3809
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ் உங்களுக்கு, “வேதம் அருளப்பட்டவர்களிலும் இணைவைப்பாளர்களிலும் உள்ள இறைமறுப்பாளர்கள் தெளிவான சான்று தங்களிடம் வரும்வரை தங்களுடைய இறைமறுப்பிலிருந்து விலகிக்கொள்வோராய் இருக்கவில்லை...” எனும் (திருக்குர்ஆனின் 98ஆம்) அத்தியாயத்தை ஓதிக்காட்டும்படி எனக்குக் கட்டளை யிட்டான்” என்று சொன்னார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “என் பெயரைக் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். அதைக் கேட்டு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (ஆனந்தம் மேலிட) அழுதார்கள். அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا غندر، قال سمعت شعبة، سمعت قتادة، عن انس بن مالك رضى الله عنه قال النبي صلى الله عليه وسلم لابى " ان الله امرني ان اقرا عليك {لم يكن الذين كفروا} ". قال وسماني قال " نعم " فبكى
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3809
- Book Index
- 34
Grades
- -
