ஹதீஸ்கள்
#3804
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: சஅத் பின் முஆத் (ரலி) அவர்களு டைய தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக்கொண்டு (பனூ குறைழா யூத) மக்கள் (கைபரிலுள்ள கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சஅத் பின் முஆத் (ரலி) அவர்களுக்கு ஆளனுப் பிட அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீயிலிருந்து) கழுதையின் மீது (பயணம் செய்தபடி) வந்தார்கள். (நபியவர்கள் தாற்காலிமாக அமைத்திருந்த) தொழுமிடத்திற்கு அருகே அவர்கள் வந்து சேர்ந்ததும், நபி (ஸல்) அவர்கள், “உங்களில் சிறந்தவரை'அல்லது “உங்கள் தலைவரை' நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத் திலிருந்து இறக்கிவிடு)ங்கள்” என்று சொன்னார்கள். பிறகு, “சஅதே! இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக்கிறார்கள் (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப்போகிறீர்கள்?)” என்று கேட்டார் கள். சஅத் (ரலி) அவர்கள், “இவர்களில் போரிடும் வலிமையுடையவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றும், இவர்களுடைய பெண்களும் குழந்தைகளும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் நான் இவர்கள் விஷயத்தில் தீர்ப்பளிக்கிறேன்” என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்; அல்லது அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள்” என்று சொன்னார்கள்.36 அத்தியாயம் :
حدثنا محمد بن عرعرة، حدثنا شعبة، عن سعد بن ابراهيم، عن ابي امامة بن سهل بن حنيف، عن ابي سعيد الخدري رضى الله عنه ان اناسا نزلوا على حكم سعد بن معاذ، فارسل اليه فجاء على حمار، فلما بلغ قريبا من المسجد قال النبي صلى الله عليه وسلم " قوموا الى خيركم او سيدكم ". فقال " يا سعد، ان هولاء نزلوا على حكمك ". قال فاني احكم فيهم ان تقتل مقاتلتهم وتسبى ذراريهم. قال " حكمت بحكم الله، او بحكم الملك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3804
- Book Index
- 29
Grades
- -
