ஹதீஸ்கள்
#3803
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சஅத் பின் முஆத் அவர்களின் இறப் பிற்காக அர்ஷ் (இறை அரியணை) அசைந்தது.34 இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் வந்துள்ளதாவது: ஒரு மனிதர் ஜாபிர் (ரலி) அவர்களிடம், “பராஉ (ரலி) அவர்கள், “சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சுமந்து சென்ற (ஜனாஸா) பெட்டிதான் அசைந்தது' என்று இதற்கு விளக்கம் தருகிறார்கள்” என்று சொன்னதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “இந்த (அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ்) இரு குடும்பங்களுக்கிடையே குரோதங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள், “சஅத் பின் முஆத் அவர்களின் இறப்பிற்காக அளவற்ற அருளாள(னான இறைவ)னின் அரியணை அசைந்தது' என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள்.35 அத்தியாயம் :
حدثني محمد بن المثنى، حدثنا فضل بن مساور، ختن ابي عوانة حدثنا ابو عوانة، عن الاعمش، عن ابي سفيان، عن جابر رضى الله عنه سمعت النبي صلى الله عليه وسلم يقول " اهتز العرش لموت سعد بن معاذ ". وعن الاعمش حدثنا ابو صالح عن جابر عن النبي صلى الله عليه وسلم مثله. فقال رجل لجابر فان البراء يقول اهتز السرير. فقال انه كان بين هذين الحيين ضغاين، سمعت النبي صلى الله عليه وسلم يقول " اهتز عرش الرحمن لموت سعد بن معاذ
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3803
- Book Index
- 28
Grades
- -
