ஹதீஸ்கள்
#3800
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்வாய்ப்பட்டிருந்தபோது) தம் தோள்களின் மீது ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு (வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டார்கள். அப்போது அவர்கள் (தலை)மீது கறுப்புக் கட்டு ஒன்று (போடப்பட்டு) இருந்தது. சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்து, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, பிறகு சொன்னார்கள்: மக்களே! (இஸ்லாத்தில் இணையும்) மக்கள் (எண்ணிக்கையில்) அதிகமாவார்கள். (ஆனால் இறைமார்க்கத்திற்கு) உதவி புரிவோர் (அன்சார்கள்) உணவில் உப்பைப் போன்று ஆகிவிடும் அளவுக்குக் குறைந்து போய்விடுவார்கள். ஆகவே, ஒருவருக்கு நன்மையளிக்கக்கூடிய, அல்லது தீங்கு செய்யக்கூடிய (அளவுக்குள்ள) ஓர் அதிகாரப் பொறுப்பை உங்களில் ஒருவர் ஏற்றால், அன்சாரிகளில் நன்மை புரிந்தவரின் நன்மையை ஏற்றுக்கொண்டு அவர்களில் தவறிழைத்தவரை மன்னித்து விடட்டும்.30 அத்தியாயம் :
حدثنا احمد بن يعقوب، حدثنا ابن الغسيل، سمعت عكرمة، يقول سمعت ابن عباس رضى الله عنهما يقول خرج رسول الله صلى الله عليه وسلم وعليه ملحفة، متعطفا بها على منكبيه، وعليه عصابة دسماء حتى جلس على المنبر، فحمد الله واثنى عليه، ثم قال " اما بعد، ايها الناس، فان الناس يكثرون وتقل الانصار، حتى يكونوا كالملح في الطعام، فمن ولي منكم امرا يضر فيه احدا او ينفعه، فليقبل من محسنهم، ويتجاوز عن مسييهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3800
- Book Index
- 25
Grades
- -
