ஹதீஸ்கள்
#3796
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அகழ்ப்போர் நாளில் அன்சாரிகள், “நாங்கள் (எத்தகையவர்கள் எனில்) “நாங்கள் உயிரோடிருக்கும் காலம்வரை அறப்போர் புரிவோம்' என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத் திருக்கின்றோம்” என்று (கவிதையில்) கூறிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நிலையான) வாழ்க்கை எதுவுமில்லை; ஆகவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் கண்ணியப்படுத்துவாயாக!” என்று (கவிதையிலேயே பதில்) சொன்னார்கள்.25 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، عن حميد الطويل، سمعت انس بن مالك رضى الله عنه قال كانت الانصار يوم الخندق تقول نحن الذين بايعوا محمدا على الجهاد ما حيينا ابدا فاجابهم اللهم لا عيش الا عيش الاخره فاكرم الانصار والمهاجره
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3796
- Book Index
- 21
Grades
- -
