ஹதீஸ்கள்
#3791
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அபூஹுமைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது பனுந் நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு பனூ அப்தில் அஷ்ஹல், பிறகு பனுல் ஹாரிஸ், பிறகு பனூ சாஇதா குடும்பங்கள் ஆகும். அன்சாரிக் குடும்பங் கள் ஒவ்வொன்றிலும் நன்மை உள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார். அப்போது (அவரிடம்) அபூஉசைத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளைச் சிறந்த வர்கள் எனக் குறிப்பிட்டு (அப்படிக் குறிப்பிட்டவர்களில்) நம்மைக் கடைசியானவர்களாகக் குறிப்பிட்டுள்ளதை நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கேட்டார்கள். (இதைக் கேட்ட) உடனே சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை அடைந்து, “அல்லாஹ் வின் தூதரே! அன்சாரிகளின் கிளைக் குடும்பங்கள் (தங்களால்) சிறப்பித்துக் கூறப்பட்டபோது (அன்சாரிகளில் ஒரு குடும்பத்தாரான) நாங்கள் கடைசியாகக் குறிப்பிடப்பட்டுள்ளோமே (ஏன்?)” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் மிகச் சிறந்த (குடும்பத்த)வர்களில் இடம்பெற்றிருப்பதே உங்களுக்குப் போதுமானதல்லவா?” என்று சொன்னார்கள்.19 அத்தியாயம் :
حدثنا خالد بن مخلد، حدثنا سليمان، قال حدثني عمرو بن يحيى، عن عباس بن سهل، عن ابي حميد، عن النبي صلى الله عليه وسلم قال " ان خير دور الانصار دار بني النجار، ثم عبد الاشهل، ثم دار بني الحارث، ثم بني ساعدة، وفي كل دور الانصار خير ". فلحقنا سعد بن عبادة فقال ابا اسيد الم تر ان نبي الله صلى الله عليه وسلم خير الانصار فجعلنا اخيرا فادرك سعد النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله، خير دور الانصار فجعلنا اخرا. فقال " اوليس بحسبكم ان تكونوا من الخيار
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3791
- Book Index
- 16
Grades
- -
