ஹதீஸ்கள்
#3789
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அபூஉசைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அன்சாரிகளின் கிளைக் குடும்பங் களில் சிறந்தது பனுந் நஜ்ஜார் குடும்ப மாகும்.13 பிறகு பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும்.14 பிறகு பனூ ஹாரிஸ் பின் அல்கஸ்ரஜ் குடும்பமாகும்.15 பிறகு பனூ சாஇதா குடும்பமாகும்.16 அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். சஅத் (பின் உபாதா -ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எங்களைவிட (வேறுசில குலங்களைச்) சிறப்பித்துக் கூறியதாகவே காண்கிறேன்” என்று சொன்னார்கள்.17 அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (இங்கே குறிப்பிடப்படாத மற்ற) பலரையும் விட உங்களைச் சிறப்பித்துக் கூறியுள் ளார்கள்” என்று சொல்லப்பட்டது. மற்றோர் அறிவிப்பில், “சஅத் பின் உபாதா' என்று (முழுமையாகப் பெயர்) குறிப்பிட்டு அறிவிப்பாளர் கூறியுள்ளார். அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، قال سمعت قتادة، عن انس بن مالك، عن ابي اسيد رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " خير دور الانصار بنو النجار، ثم بنو عبد الاشهل، ثم بنو الحارث بن خزرج، ثم بنو ساعدة، وفي كل دور الانصار خير ". فقال سعد ما ارى النبي صلى الله عليه وسلم الا قد فضل علينا فقيل قد فضلكم على كثير. وقال عبد الصمد حدثنا شعبة، حدثنا قتادة، سمعت انسا، قال ابو اسيد عن النبي صلى الله عليه وسلم بهذا، وقال سعد بن عبادة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3789
- Book Index
- 14
Grades
- -
