ஹதீஸ்கள்
#3781
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (புலம்பெயர்ந்து மதீனாவுக்கு) எங்களிடம் வந்தார்கள். அவர்களுக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள் - சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள் அதிக செல்வமுடையவராக இருந்தார்கள் - சஅத் (ரலி) அவர்கள், “அன்சாரிகள், நான் அவர்களில் அதிகச் செல்வமுடையவன் என்று அறிந்திருக் கின்றனர். என் செல்வத்தை எனக்கும் உங்களுக்கும் இடையே இரு பாதிகளாகப் பங்கிட்டு (கொடுத்து)விடுவேன். எனக்கு இரு மனைவிகள் உள்ளனர். அவர்களில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்தவளைப் பாருங்கள். நான் அவளை மணவிலக்குச் செய்துவிடுகின்றேன். அவள் ஹலால் (இத்தா முடிந்து பிறரை மணந்துகொள்ளத் தகுதியுடையவள்) ஆனதும் அவளை நீங்கள் மணந்துகொள்ளுங்கள்” என்று (தம் முஹாஜிர் சகோதரரான அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃபிடம்) கூறினார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டார் விஷயத்தில் அருள்வளம் வழங்கட்டும்” என்று கூறி (கடைவீதி சென்று)விட்டார்கள். சிறிது நெய்யையும் பாலாடைக் கட்டியையும் இலாபமாகச் சம்பாதித்த பின்னரே அன்று திரும்பி வந்தார்கள். சிறிது காலம்தான் சென்றிருக் கும். அதற்குள் அவர்கள் தம்மீது (நறுமணப் பொருளின்) மஞ்சள் அடையாளம் தோய்ந்திருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன இது?” என்று கேட்க, “நான் அன்சாரிப் பெண் ஒருத்தியை மணந்துகொண்டேன்” என்று அவர்கள் பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு என்ன (மணக்கொடை) கொடுத்தீர்கள்?” என்று கேட்டதற்கு அவர்கள், “ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கம் அல்லது ஒரு பேரீச்சங் கொட்டையளவு தங்கம்” என்று பதிலளித் தார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஒரேயோர் ஆட்டையேனும் (அறுத்து) மணவிருந்து (வலீமா) கொடுப்பீராக” என்று சொன்னார் கள்.9 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا اسماعيل بن جعفر، عن حميد، عن انس رضى الله عنه انه قال قدم علينا عبد الرحمن بن عوف، واخى رسول الله صلى الله عليه وسلم بينه وبين سعد بن الربيع، وكان كثير المال، فقال سعد قد علمت الانصار اني من اكثرها مالا، ساقسم مالي بيني وبينك شطرين، ولي امراتان، فانظر اعجبهما اليك فاطلقها، حتى اذا حلت تزوجتها. فقال عبد الرحمن بارك الله لك في اهلك. فلم يرجع يوميذ حتى افضل شييا من سمن واقط، فلم يلبث الا يسيرا، حتى جاء رسول الله صلى الله عليه وسلم وعليه وضر من صفرة فقال له رسول الله صلى الله عليه وسلم " مهيم ". قال تزوجت امراة من الانصار. فقال " ما سقت فيها ". قال وزن نواة من ذهب، او نواة من ذهب، فقال " اولم ولو بشاة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3781
- Book Index
- 6
Grades
- -
