ஹதீஸ்கள்
#3780
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (முஹாஜிர்களான) நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்கும் சஅத் பின் அர்ரபீஉ (ரலி-என்னும் அன்சாரித் தோழர்) அவர்களுக்கும் இடையே சகோதரத்துவ உறவை ஏற்படுத்தினார்கள். (என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்கள், “நான் அன்சாரிகளில் அதிகச் செல்வம் உடையவன். என் செல்வத்தை இரு பாதிகளாகப் பங்கிட்டு நான் (ஒரு பாதியை உங்களுக்குக் கொடுத்து)விடுகிறேன். எனக்கு இரு மனைவிமார்கள் உள்ளனர். அவ்விருவரில் உங்களுக்கு அதிகமாகப் பிடித்திருப்ப வளைப் பார்த்து என்னிடம் சொல்லுங்கள். நான் அவளை மணவிலக்குச் செய்து விடுகிறேன். அவளுடைய “இத்தா' காலம் முடிந்தபின் அவளை நீங்கள் மணந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீட்டாரிலும் உங்கள் செல்வத்திலும் அருள்வளத்தை வழங்கட்டும். உங்கள் கடைவீதி எங்கே?” என்று கேட்டார்கள். மக்கள் அவர்களுக்கு “பனூ கைனுகா' கடைவீதியைக் காட்டினார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அங்கு சென்று வியாபாரம் செய்து) தம்முடன் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்றுத்தான் திரும்பினார்கள். பிறகு அடுத்த நாள் காலையும் தொடர்ந்து சென்றார்கள். (இப்படியே தொடர்ந்து சென்று வியாபாரம் செய்து சம்பாதித்தார்கள்.) ஒருநாள் தம்மீது (நறுமணப் பொருள் தடவிக்கொண்டிருந்ததால்) மஞ்சள் அடையாளத்துடன் (நபி (ஸல்) அவர்களிடம்) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களை நோக்கி, “என்ன இது?” என்று கேட்டார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “நான் மணம் புரிந்துகொண்டேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு எவ்வளவு (மணக்கொடை) கொடுத்தீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள், “ஒரு பேரீச்சங் கொட்டையளவு தங்கம் அல்லது ஒரு பேரீச்சங் கொட்டையின் எடையளவு தங்கம்” என்று பதிலளித்தார்கள். அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “ஒரு பேரீச்சங் கொட்டையளவு தங்கம்' என்று சொன்னார்களா, “ஒரு பேரீச்சங் கொட்டை எடையளவு தங்கம்' என்று சொன்னார்களா என்பதில் அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.8 அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، قال حدثني ابراهيم بن سعد، عن ابيه، عن جده، قال لما قدموا المدينة اخى رسول الله صلى الله عليه وسلم بين عبد الرحمن وسعد بن الربيع، قال لعبد الرحمن اني اكثر الانصار مالا فاقسم مالي نصفين، ولي امراتان، فانظر اعجبهما اليك فسمها لي اطلقها، فاذا انقضت عدتها فتزوجها. قال بارك الله لك في اهلك ومالك، اين سوقكم فدلوه على سوق بني قينقاع، فما انقلب الا ومعه فضل من اقط وسمن، ثم تابع الغدو، ثم جاء يوما وبه اثر صفرة فقال النبي صلى الله عليه وسلم " مهيم ". قال تزوجت. قال " كم سقت اليها ". قال نواة من ذهب. او وزن نواة من ذهب، شك ابراهيم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3780
- Book Index
- 5
Grades
- -
