ஹதீஸ்கள்
#3779
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அபுல்காசிம் (நபி-ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்துசென்றால் அன்சாரிகள் நடந்துசெல்லும் பள்ளத் தாக்கில்தான் நானும் நடந்துசெல்வேன். ஹிஜ்ரத் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாக இருந்திருப்பேன். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்: இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் மிகச் சரியாகவே இப்படிக் கூறியுள்ளார்கள் (என்று கூறிவிட்டு) - என் தந்தையும் என் தாயும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- “(நபியவர்கள் இப்படிச் சொன்னதற்குக் காரணம்) அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களுக்குப் புகலிடம் அளித்து அவர்களுக்கு உதவி செய்தார்கள்' என்றோ... (இவ்விரு வாக்கியங்களுடன் சேர்த்து) வேறொரு வாக்கியத்தையோ சொன்னார்கள்.6 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3779
- Book Index
- 4
Grades
- -