ஹதீஸ்கள்
#3778
ஸஹீஹ் அல்-புகாரீ - Merits of the Helpers in Madinah (Ansaar)
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) நபி (ஸல்) அவர்கள் (அன்சாரிகளுக்கு வழங்காமல், புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த) மக்கா குறைஷியருக்குக் கொடுத்தபோது அன்சாரிகள், “அல்லாஹ்வின் மீதாணை யாக! உண்மையில், இது வியப்பாகத்தான் இருக்கிறது. நம்முடைய வாட்களில் குறைஷியரின் இரத்தம் சொட்டிக்கொண்டி ருக்க, நமக்குச் சேர வேண்டிய போர்ச் செல்வங்கள் அவர்களுக்கல்லவா திருப்பிக் கொடுக்கப்படுகின்றன?” என்று பேசிக்கொண்டார்கள்.3 அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டது நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை அவர்கள் அழைத்து, “உங்களைப் பற்றி எனக்கெட்டிய செய்தி என்ன?” என்று கேட்டார்கள். அவர்கள் (நபித்தோழர்கள்) பொய் சொல்லாதவர்களாய் இருந்தனர்- ஆகவே அவர்கள், “(உண்மையில் நாங்கள் பேசிக்கொண்டதும்) உங்களுக்கு எட்டியதேதான்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “மக்கள் போர்ச் செல்வங்களைப் பெற்றுக்கொண்டு தம் வீடுகளுக்குத் திரும்பிச் செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுட னேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? அன்சாரிகள் ஒரு பள்ளத்தாக்கிலோ ஒரு கணவாயிலோ நடந்துசென்றால் அவர்கள் செல்கின்ற பள்ளத்தாக்கிலோ கண வாயிலோதான் நானும் நடந்துசெல்வேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن ابي التياح، قال سمعت انسا رضى الله عنه يقول قالت الانصار يوم فتح مكة واعطى قريشا والله ان هذا لهو العجب، ان سيوفنا تقطر من دماء قريش، وغنايمنا ترد عليهم. فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فدعا الانصار قال فقال " ما الذي بلغني عنكم ". وكانوا لا يكذبون. فقالوا هو الذي بلغك. قال " اولا ترضون ان يرجع الناس بالغنايم الى بيوتهم، وترجعون برسول الله صلى الله عليه وسلم الى بيوتكم لو سلكت الانصار واديا او شعبا، لسلكت وادي الانصار او شعبهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Merits of the Helpers in Madinah (Ansaar)
- Hadith Index
- #3778
- Book Index
- 3
Grades
- -
