ஹதீஸ்கள்
#3695
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அபூமூசா (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத் தினுள் நுழைந்தார்கள். தோட்டத்தின் வாயிற்கதவைக் காவல் புரியும்படி எனக்குக் கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் நபி (ஸல்) அவர்களிடம் அவருக்காக அனுமதி கேட்க) அவர்கள், “அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (நான் அவரிடம் சொல்லச் சென்றபோது) அம்மனிதர் அபூபக்ர் (ரலி) அவர்களாக இருந்தார்கள். பிறகு மற்றொருவர் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார். (நான் சென்று நபியவர்களிடம் அனுமதி கேட்க), “அவருக்கு அனுமதி கொடுங்கள்; அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தியும் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (நான் அவ்வாறே சொல்லச் சென்றபோது) அந்த மனிதர் உமர் (ரலி) அவர்களாக இருந்தார்கள். பிறகு இன்னொரு மனிதர் வந்து உள்ளே வர அனுமதி கேட்டார். (நான் சென்று நபியவர்களிடம் கதவைத் திறக்க அனுமதி கேட்டபோது) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந்துவிட்டுப் பிறகு, “அவருக்கு அனுமதி கொடுங்கள்; (வருங்காலத்தில்) அவருக்கு நேரவிருக்கும் துன்பத்தையடுத்து அவருக்குச் சொர்க்கம் கிடைக்கும் என்று நற்செய்தி சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (நான் சென்று கதவைத் திறந்தபோது) அவர் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களாக இருந்தார்கள்.58 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஆஸிம் பின் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் தம்மிரு முழங்கால்களும்- அல்லது தமது முழங்கால்- தெரிய தண்ணீர் உள்ள இடத்திற்கருகே அமர்ந்திருந்தார்கள். உஸ்மான் (ரலி) அவர்கள் உள்ளே வந்தபோது தமது முழங்காலை மூடிக்கொண்டார்கள்” எனக் கூடுதலாக அறிவித்துள்ளார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد، عن ايوب، عن ابي عثمان، عن ابي موسى رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم دخل حايطا وامرني بحفظ باب الحايط، فجاء رجل يستاذن، فقال " ايذن له وبشره بالجنة ". فاذا ابو بكر، ثم جاء اخر يستاذن فقال " ايذن له وبشره بالجنة ". فاذا عمر، ثم جاء اخر يستاذن، فسكت هنيهة ثم قال " ايذن له وبشره بالجنة على بلوى ستصيبه ". فاذا عثمان بن عفان. قال حماد وحدثنا عاصم الاحول، وعلي بن الحكم، سمعا ابا عثمان، يحدث عن ابي موسى، بنحوه، وزاد فيه عاصم ان النبي صلى الله عليه وسلم كان قاعدا في مكان فيه ماء، قد انكشفت عن ركبتيه او ركبته، فلما دخل عثمان غطاها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3695
- Book Index
- 45
Grades
- -
