ஹதீஸ்கள்
#3690
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (இஸ்ரவேலர்களில்) ஓர் ஆட்டிடையர் தம் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த போது ஓர் ஓநாய், ஆடு ஒன்றைக் கவ்விக்கொண்டு ஓடலாயிற்று. ஆட்டை மேய்த்துக்கொண்டிருந்தவர் அந்த ஓநாயைத் துரத்திச் சென்றார். அப்போது ஓநாய் அவரைப் பார்த்து, “மன் லஹா யவ்மஸ் ஸபுஇ? (கொடிய விலங்குகள் ஆதிக்கம் செலுத்தும் உலக முடிவு நாளில் இதைப் பாதுகாக்கக்கூடியவர் யார்?) அப்போது என்னைத் தவிர இதற்கு மேய்ப்பாளன் (பொறுப்பாளன்) எவனும் இருக்கமாட்டானே' என்று கூறியது. (இதைக் கேட்டு வியந்தவர்களாக) “சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என மக்கள் கூறினர். அப்போது நானும், அபூபக்ரும் உமரும் இந்த நிகழ்ச்சியை நம்புகிறோம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நபியவர்கள் இதைக் கூறிய சமயம்) அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அங்கு இருக்கவில்லை.51 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3690
- Book Index
- 40
Grades
- -