ஹதீஸ்கள்
#3686
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோர் தம்முட னிருக்க, நபி (ஸல்) அவர்கள் உஹுத் மலைமீது ஏறினார்கள். அப்போது அது அவர்களுடன் நடுங்கியது. உடனே நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது காலால் உதைத்து, “ “உஹுதே! அசையாமல் இரு! உன்மீது ஓர் இறைத்தூதரும் (நானும்), ஒரு சித்தீக்கும், இரு உயிர்த் தியாகிகளும்தான் உள்ளனர்” என்று சொன்னார்கள்.46 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3686
- Book Index
- 36
Grades
- -