ஹதீஸ்கள்
#3683
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். அப்போது (நபியவர்களின் துணைவியரான) குறைஷிப் பெண்கள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் பேசிக்கொண்டும் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி கேட்டுக்கொண்டும் இருந்தனர். அவர்களின் குரல்கள் நபி (ஸல்) அவர்களின் குரலைவிட உயர்ந்திருந்தன. உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் உள்ளே வர அனுமதி கேட்டவுடன் அப்பெண்கள் எழுந்து அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள். (தம் வீட்டுப் பெண்கள் உமர் அவர்களுக்கு அஞ்சு வதைக் கண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்துக்கொண்டிருக்க, உமர் (ரலி) அவர்கள் உள்ளே நுழைந்தார் கள். “அல்லாஹ் உங்களை ஆயுள் முழுவதும் சிரித்தபடி (மகிழ்ச்சியுடன்) வாழவைப்பானாக! அல்லாஹ்வின் தூதரே!” என்று உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என்னிடமிருந்த இந்தப் பெண் களைக் குறித்து நான் வியப்படைகிறேன். உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாக பர்தா அணிந்துகொண்டார் களே” என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “இந்தப் பெண்கள் அஞ்சுவதற்கு நீங்களே மிகவும் தகுதியுடையவர்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (அப்பெண்களை நோக்கி), “தமக்குத்தாமே பகைவர்களாயிருப்பவர் களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அஞ்சாமல் எனக்கு நீங்கள் அஞ்சுகிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம், நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட கடுமை காட்டுபவரும் கடின சித்தமுடையவரும் ஆவீர்கள்” என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சரி! விடுங்கள், கத்தாபின் புதல்வரே! என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒரு தெருவில் நீங்கள் (நடந்து) செல்வதை ஷைத்தான் கண்டால், அவன் உங்கள் தெருவை விட்டுவிட்டு வேறொரு தெருவில்தான் செல்வான்” என்று சொன் னார்கள்.44 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا يعقوب بن ابراهيم، قال حدثني ابي، عن صالح، عن ابن شهاب، اخبرني عبد الحميد، ان محمد بن سعد، اخبره ان اباه قال ح حدثني عبد العزيز بن عبد الله، حدثنا ابراهيم بن سعد، عن صالح، عن ابن شهاب، عن عبد الحميد بن عبد الرحمن بن زيد، عن محمد بن سعد بن ابي وقاص، عن ابيه، قال استاذن عمر بن الخطاب على رسول الله صلى الله عليه وسلم، وعنده نسوة من قريش يكلمنه ويستكثرنه، عالية اصواتهن على صوته فلما استاذن عمر بن الخطاب قمن فبادرن الحجاب فاذن له رسول الله صلى الله عليه وسلم فدخل عمر ورسول الله صلى الله عليه وسلم يضحك، فقال عمر اضحك الله سنك يا رسول الله. فقال النبي صلى الله عليه وسلم " عجبت من هولاء اللاتي كن عندي فلما سمعن صوتك ابتدرن الحجاب ". فقال عمر فانت احق ان يهبن يا رسول الله. ثم قال عمر يا عدوات انفسهن، اتهبنني ولا تهبن رسول الله صلى الله عليه وسلم فقلن نعم، انت افظ واغلظ من رسول الله صلى الله عليه وسلم. فقال رسول الله صلى الله عليه وسلم " ايها يا ابن الخطاب والذي نفسي بيده ما لقيك الشيطان سالكا فجا قط الا سلك فجا غير فجك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3683
- Book Index
- 33
Grades
- -
