ஹதீஸ்கள்
#3682
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கனவில் இப்படி எனக்குக் காட்டப்பட்டது: நான் ஒரு சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றின் மீதிருந்த ஒரு வாளியால் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ர் அவர்கள் வந்து ஒரு வாளி- அல்லது இரு வாளிகள்- தண்ணீரை (சற்று) சோர்வான நிலையில் இறைத்தார்கள். அவரை அல்லாஹ் மன்னிப்பானாக! பிறகு உமர் பின் அல்கத்தாப் அவர்கள் வந்தார்கள். உடனே அந்த வாளி மிகப்பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) அவரைப்போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடிய புத்திசாலியான ஒரு (அபூர்வத்) தலைவரை நான் கண்டதில்லை. மக்கள் தாகம் தீர்ந்து, (தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர்நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு (அவர் நீர் இறைத்தார்).43 அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், “இந்த ஹதீஸி(ன் மூலத்தி)ல் இடம்பெற்றுள்ள “அப்கரிய்யு' எனும் சொல், “உயர் தரமான விரிப்பு' என (அகராதியில்) பொருள்படும்” என்று கூறுகிறார்கள். மற்றோர் அறிவிப்பாளரான யஹ்யா பின் ஸியாத் (ரஹ்) அவர்கள், “மென்மையான குஞ்சம் வைத்த விரிப்பு' என்று (பொருள்) கூறுகிறார். “ஸராபிய்யு மப்ஸƒஸா' (88:16) என்ப தற்கு “விரிக்கப்பட்ட அதிகமான கம்பளங் கள்' என்பது பொருள். அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الله بن نمير، حدثنا محمد بن بشر، حدثنا عبيد الله، قال حدثني ابو بكر بن سالم، عن سالم، عن عبد الله بن عمر رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم قال " اريت في المنام اني انزع بدلو بكرة على قليب، فجاء ابو بكر فنزع ذنوبا او ذنوبين نزعا ضعيفا، والله يغفر له، ثم جاء عمر بن الخطاب فاستحالت غربا، فلم ار عبقريا يفري فريه حتى روي الناس وضربوا بعطن ". قال ابن جبير العبقري عتاق الزرابي. وقال يحيى الزرابي الطنافس لها خمل رقيق {مبثوثة} كثيرة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3682
- Book Index
- 32
Grades
- -
