ஹதீஸ்கள்
#3677
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் சில மக்களிடையே நின்றுகொண்டிருக்க, அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்காக துஆ செய்தார்கள். -அப்போது உமர் (ரலி) அவர்கள் (இறந்து) கட்டிலின் மீது கிடத்தப்பட்டிருந்தார்கள்- அப்போது என் பின்னாலிருந்து ஒரு மனிதர் தன் முழங்கையை என் தோளின் மீது வைத்து (உமர் (ரலி) அவர்களை நோக்கி), “அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும். அல்லாஹ் (உங்கள் உடல் அடக்கம் செய்யப்படும்போது) உங்களை உங்களுடைய இரு தோழர் க(ளான நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்க)ளுடன் (அவர் களின் மண்ணறைகளுக்கு அருகே) இருக்கச்செய்ய வேண்டும் என்று நான் விரும்பிக்கொண்டிருந்தேன். ஏனெனில், பெரும்பாலான நேரங் களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானும் அபூபக்ரும் உமரும் (இப்படி) இருந்தோம்; நானும் அபூபக்ரும் உமரும் (இப்படிச்) செய்தோம்; நானும் அபூபக்ரும் உமரும் (இங்கே) சென்றோம்' என்று சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். ஆகவே, உங்களை அல்லாஹ் அவ்விரு வருடன் (அவர்களின் மண்ணறைகளுக்கு அருகே) இருக்குமாறு செய்திட வேண்டு மென்று நான் விரும்புகிறேன்” என்று சொன்னார். நான் திரும்பிப் பார்த்தேன். இப்படிச் சொன்ன அந்த மனிதர் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்தான். அத்தியாயம் :
حدثني الوليد بن صالح، حدثنا عيسى بن يونس، حدثنا عمر بن سعيد بن ابي الحسين المكي، عن ابن ابي مليكة، عن ابن عباس رضى الله عنهما قال اني لواقف في قوم، فدعوا الله لعمر بن الخطاب وقد وضع على سريره، اذا رجل من خلفي قد وضع مرفقه على منكبي، يقول رحمك الله، ان كنت لارجو ان يجعلك الله مع صاحبيك، لاني كثيرا مما كنت اسمع رسول الله صلى الله عليه وسلم يقول كنت وابو بكر وعمر، وفعلت وابو بكر وعمر، وانطلقت وابو بكر وعمر. فان كنت لارجو ان يجعلك الله معهما. فالتفت فاذا هو علي بن ابي طالب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3677
- Book Index
- 27
Grades
- -
