ஹதீஸ்கள்
#3676
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (கனவில்) ஒரு கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கும்போது என்னிடம் அபூபக்ரும் உமரும் வந்தார்கள். அபூபக்ர் அவர்கள் (நான் நீர் இறைத்து முடித்தபின்) வாளியை எடுத்து ஒரு வாளி நீரை- அல்லது இரு வாளிகள் நீரை- இறைத்தார்கள். அவர் இறைத்த போது (சற்று) சோர்வு தென்பட்டது. அவருக்கு அல்லாஹ் மன்னிப்பளிப் பானாக! பிறகு அபூபக்ர் அவர்களின் கரத்திலிருந்து உமர் அவர்கள் அதை எடுத்துக்கொள்ள அது அவரது கையில் பெரியதொரு வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.) மக்களில் அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடியபுத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தங்கள் ஒட்டகங்களுக்கு நீர் புகட்டி, நீர்நிலையருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டிவைக்கும் அளவுக்கு அவர் நீர் இறைத்தார்.37 அறிவிப்பாளர்களில் ஒருவரான வஹ்ப் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள், “இந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள “அத்தன்' என்னும் சொல், “ஒட்டகம் தாகம் தீர நீரருந்தி, மண்டியிட்டுப் படுத்து ஓய்வெடுக்கும் இடம்' எனப் பொருள்படும்” என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثني احمد بن سعيد ابو عبد الله، حدثنا وهب بن جرير، حدثنا صخر، عن نافع، ان عبد الله بن عمر رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم " بينما انا على بير انزع منها جاءني ابو بكر وعمر، فاخذ ابو بكر الدلو، فنزع ذنوبا او ذنوبين وفي نزعه ضعف، والله يغفر له، ثم اخذها ابن الخطاب من يد ابي بكر، فاستحالت في يده غربا، فلم ار عبقريا من الناس يفري فريه، فنزع حتى ضرب الناس بعطن ". قال وهب العطن مبرك الابل، يقول حتى رويت الابل فاناخت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3676
- Book Index
- 26
Grades
- -
