ஹதீஸ்கள்
#3666
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவர் அல்லாஹ்வின் பாதையில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டாரோ அவர் சொர்க்கத்தின் வாயில்களில் (ஒவ்வொன்றில்) இருந்து “அல்லாஹ்வின் அடியாரே! இது சிறந்த தாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)' என்று அழைக்கப்படுவார். அதாவது தொழுகையாளியாக இருந்தவர் தொழு கைக்குரிய வாயிலிலிருந்து அழைக்கப் படுவார். ஜிஹாத் (அறப்போர்) புரிபவராக இருந்தவர் ஜிஹாதுக்குரிய வாயிலிலிருந்து அழைக்கப்படுவார். தர்மம் (ஸதகா) செய்பவராக இருந்தவர் தர்மத்திற்குரிய வாயிலிலிருந்து அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் நோன்பின் வாயிலிலிருந்தும், “அர்ரய்யான்' என்னும் (நோன்பாளிகளுக்கே உரிய சிறப்பு) வாயிலிலிருந்தும் அழைக்கப்படுவார்' என்று சொன்னார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “இந்த வாயில்களிலிருந்து அழைக்கப்படு பவருக்குத் துயரம் எதுவும் இருக்காது. (அவர் எந்த வழியிலாவது சொர்க்கம் சென்றுவிடுவார்)” என்று கூறிவிட்டு, “அவை அனைத்திலிருந்தும் எவராவது அழைக்கப்படுவாரா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள், “நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்க வேண்டுமென்று நான் எதிர்பார்க்கிறேன், அபூபக்ரே!” என்று சொன்னார்கள்.24 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3666
- Book Index
- 18
Grades
- -