ஹதீஸ்கள்
#3665
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “எவன் தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக்கொண்டு செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் கவனமாக இல்லாவிட்டால் எனது ஆடையின் ஒரு பக்கம் கீழே தொங்கிவிடுகின்றது” என்று சொன்னார்கள். அதைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் அதைத் தற்பெருமை பாராட்டுவதற்காகச் செய்வதில்லையே” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் மூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சாலிம் (ரஹ்) அவர்களிடம், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “எவன் தன் கீழங்கியை (இஸார்) இழுத்துக் கொண்டு செல்கிறானோ' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவா சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “(எவன்) தன் ஆடையை' (ஸவ்ப்) என்று அறிவித்ததைத்தான் நான் கேட்டேன்” எனப் பதிலளித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3665
- Book Index
- 17
Grades
- -