ஹதீஸ்கள்
#3662
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “தாத்துஸ் ஸலாஸில்' எனும் போருக்கான21 படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷா” என்று பதிலளித்தார்கள். நான், “ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)” என்று பதிலளித்தார்கள். “பிறகு யார் (பிரியமானவர்)?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “பிறகு உமர் பின் அல்கத்தாப்தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)” என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا معلى بن اسد، حدثنا عبد العزيز بن المختار، قال خالد الحذاء حدثنا عن ابي عثمان، قال حدثني عمرو بن العاص رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم بعثه على جيش ذات السلاسل، فاتيته فقلت اى الناس احب اليك قال " عايشة ". فقلت من الرجال فقال " ابوها ". قلت ثم من قال " ثم عمر بن الخطاب ". فعد رجالا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3662
- Book Index
- 14
Grades
- -
