ஹதீஸ்கள்
#3650
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues of the Companions of the Prophet
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுறையினர் ஆவர்.3 பிறகு, உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கிறார்கள். அவர்கள், தங்களிடம் சாட்சியம் கோரப் படாமலேயே சாட்சியம் சொல்வார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள்; (மக்களின்) நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கமாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி ஏற்படும்) நிலை தோன்றும்.4 (இதை அறிவிக்கும் நபித்தோழர்) இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுறைக்குப் பிறகு இரண்டு தலைமுறைகளைக் கூறினார்களா, அல்லது மூன்று தலைமுறைகளைக் கூறினார்களா என்பது எனக்குத் தெரியாது.5 அத்தியாயம் :
حدثني اسحاق، حدثنا النضر، اخبرنا شعبة، عن ابي جمرة، سمعت زهدم بن مضرب، سمعت عمران بن حصين رضى الله عنهما يقول قال رسول الله صلى الله عليه وسلم " خير امتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم ". قال عمران فلا ادري اذكر بعد قرنه قرنين او ثلاثا " ثم ان بعدكم قوما يشهدون ولا يستشهدون، ويخونون ولا يوتمنون، وينذرون ولا يفون، ويظهر فيهم السمن
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues of the Companions of the Prophet
- Hadith Index
- #3650
- Book Index
- 2
Grades
- -
