ஹதீஸ்கள்
#3648
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் தங்களிடமிருந்து நிறைய செய்திகளைச் செவியுற்றிருக்கிறேன். ஆனால், அவற்றை நான் மறந்துவிடுகிறேன்” என்று (நபி (ஸல்) அவர்களிடம்) சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “உன் மேல் துண்டை விரி” என்று சொல்ல, நானும் அதை விரித்தேன். பிறகு அவர்கள் தம் இரு கைகளால் (எதையோ அள்ளுவதைப் போன்று சைகை செய்து) அதில் அள்ளி(க் கொட்டி)னார்கள். பிறகு “இதைச் சேர்த்து (நெஞ்சோடு) அணைத்துக்கொள்” என்று சொன்னார்கள். நானும் அவ்வாறே அதை (என் நெஞ்சோடு) சேர்த்து அணைத் துக்கொண்டேன். அதன் பிறகு எந்த ஹதீஸையும் நான் மறக்கவில்லை.162 அத்தியாயம் :
حدثني ابراهيم بن المنذر، حدثنا ابن ابي الفديك، عن ابن ابي ذيب، عن المقبري، عن ابي هريرة رضى الله عنه قال قلت يا رسول الله اني سمعت منك كثيرا فانساه. قال " ابسط رداءك ". فبسطت فغرف بيده فيه، ثم قال " ضمه " فضممته، فما نسيت حديثا بعد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3648
- Book Index
- 151
Grades
- -
