ஹதீஸ்கள்
#3646
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவு களைத் தருவதாகும்.) ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பளிக்கக்கூடிய தாகும்; இன்னொரு மனிதருக்குப் பாவச் சுமையாகும். அதை இறைவழியில் பயன்படுத்துவதற் காக, அதனைப் பசுமையான ஒரு வெட்ட வெளியில்- அல்லது ஒரு தோட்டத்தில்- ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கின்ற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை, தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவுக்குப் பசும்புல் வெளியில் -அல்லது தோட்டத்தில்- மேயுமோ அந்த அளவுக்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கயிறு அறுந்து, அது ஓரிரண்டு முறை குதித்து (அல்லது ஓரிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதன் (குளம்பின்) சுவடுகளின் அளவுக்கும் அதன் கெட்டிச் சாணத்தின் அளவுக்கும் அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அதன் உரிமையாளருக்கு இல்லாமல் இருந்தாலும் அது அவர் செய்த நன்மைகளின் கணக்கில் எழுதப்படும். இன்னொருவர் தம் தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளவும் அதைக் கட்டி வை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதன் பிடரியின் (அதன் விற்பனையின் வருமானத்திற்கான ஸகாத்தைச் செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்க முடிந்த பளுவை மட்டுமே) அதன் முதுகின் (மீது வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு (அவருடைய) இந்தக் குதிரை (வறுமையி óருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் முஸ்லிம்களுடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்து பராமரி)க்கின்றவன் ஆவான். அதன் காரணத்தால், அது அவனுக்குப் பாவச் சுமையாக ஆகிவிடுகிறது. நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவற்றைக் குறித்து எந்த இறை கட்டளையும் எனக்கு அருளப்படவில்லை; “யார் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டு கொள்வார். மேலும், யார் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்' (99:7,8) என்னும் இந்த ஒருங்கிணைந்த, தனித்தன்மை வாய்ந்த குர்ஆன் வசனத்தைத் தவிர” என்று கூறினார்கள்.159 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، عن مالك، عن زيد بن اسلم، عن ابي صالح السمان، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " الخيل لثلاثة لرجل اجر، ولرجل ستر وعلى رجل وزر. فاما الذي له اجر، فرجل ربطها في سبيل الله، فاطال لها في مرج او روضة، وما اصابت في طيلها من المرج او الروضة كانت له حسنات، ولو انها قطعت طيلها، فاستنت شرفا او شرفين، كانت ارواثها حسنات له، ولو انها مرت بنهر فشربت، ولم يرد ان يسقيها، كان ذلك له حسنات، ورجل ربطها تغنيا وسترا وتعففا، لم ينس حق الله في رقابها وظهورها، فهي له كذلك ستر. ورجل ربطها فخرا ورياء، ونواء لاهل الاسلام فهى وزر. وسيل النبي صلى الله عليه وسلم عن الحمر فقال " ما انزل على فيها الا هذه الاية الجامعة الفاذة {فمن يعمل مثقال ذرة خيرا يره * ومن يعمل مثقال ذرة شرا يره}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3646
- Book Index
- 149
Grades
- -
