ஹதீஸ்கள்
#3634
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் (கனவில்) மக்களெல்லாரும் ஒரு திடóல் ஒன்றுதிரண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூபக்ர் எழுந்து (ஒரு கிணற்றிலிருந்து) ஒரு வாளி- அல்லது இரண்டு வாளிகள்- இறைத்தார். சிறிது நேரம் அவர் இறைத்தவுடன் சோர்வு தெரிந்தது.152 அவரை அல்லாஹ் மன்னிப் பானாக! பிறகு அதை உமர் எடுத்துக்கொள்ள, அது அவரின் கையில் பெரிய வாளியாக மாறியது. (அவர் வலுவுடன் பல வாளிகள் தண்ணீர் இறைத்தார்.)153 அவரைப் போல் சீராகவும் உறுதியாகவும் செயல்படக்கூடிய புத்திசாலியான (அபூர்வத்) தலைவர் ஒருவரை நான் கண்டதில்லை. மக்கள் (தாகம்தீரத் தாங்களும் அருந்தி, தங்கள் ஒட்டகங்களுக்கும் நீர் புகட்டி, நீர்நிலைய ருகே அவற்றின்) ஓய்விடத்தில் கட்டி வைத்தனர். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அபூபக்ர், இரு வாளிகளை இறைத்தார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய தாக (ஒன்றா, இரண்டா என்ற சந்தேகமின்றி) அபூஹுரைரா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3634
- Book Index
- 137
Grades
- -