ஹதீஸ்கள்
#3617
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: ஒரு மனிதர் கிறித்தவராக இருந்தார். பிறகு அவர் இஸ்லாத்தைத் தழுவினார். “அல்பகரா' மற்றும் “ஆலு இம்ரான்' ஆகிய அத்தியாயங்களை ஓதினார். அவர் நபி (ஸல்) அவர்களுக்காக (வேத அறிவிப்பை) எழுதிவந்தார். அவர் (மீண்டும்) கிறித்தவ ராகவே மாறிவிட்டார். அவர் (மக்களிடம்) “முஹம்மதுக்கு, நான் அவருக்கு எழுதித் தந்ததைத் தவிர வேறெதுவும் தெரியாது” என்று சொல்லிவந்தார். பிறகு அல்லாஹ் அவருக்கு மரணத்தை அளித்தான். அவரை மக்கள் புதைத்துவிட்டனர். ஆனால் (மறுநாள்) அவரை பூமி துப்பிவிட்டிருந்தது. உடனே (கிறித்தவர்கள்), “இது முஹம்மத் மற்றும் அவருடைய தோழர்களின் வேலை. எங்கள் தோழர் அவர்களைவிட்டு ஓடிவந்துவிட்டதால் அவருடைய மண்ணறையைத் தோண்டி எடுத்து அவரை வெளியே போட்டு விட்டார்கள்” என்று கூறினர். ஆகவே, அவருக்காக இன்னும் ஆழமாக ஒரு புதைகுழியைத் தோண்டினர். (அதில் புதைத்த பின்பு) மீண்டும் பூமி அவரை (வெளியே) துப்பிவிட்டிருந்தது. அப்போதும், “இது முஹம்மத் மற்றும் அவருடைய தோழர்களின் வேலைதான். நம் தோழர் அவர்களைவிட்டு வந்துவிட்ட காரணத்தால் அவரைத் தோண்டி எடுத்து மண்ணறைக்கு வெளியே போட்டுவிட்டனர்” என்று கூறினர். மீண்டும் அவர்களால் முடிந்த அளவுக்கு மிக ஆழமான குழியை அவருக்காகத் தோண்டி அதில் அவரைப் புதைத்தனர். ஆனால், அவரை பூமி மீண்டும் துப்பிவிட்டிருந்தது. அப்போதுதான் அது மனிதர்களின் வேலையல்ல (இறைவனின் தண்டனைதான்) என்று புரிந்துகொண்டனர். அவரை அப்படியே (வெளியிலேயே) போட்டு விட்டனர். அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، حدثنا عبد العزيز، عن انس رضى الله عنه قال كان رجل نصرانيا فاسلم وقرا البقرة وال عمران، فكان يكتب للنبي صلى الله عليه وسلم، فعاد نصرانيا فكان يقول ما يدري محمد الا ما كتبت له، فاماته الله فدفنوه، فاصبح وقد لفظته الارض فقالوا هذا فعل محمد واصحابه، لما هرب منهم نبشوا عن صاحبنا. فالقوه فحفروا له فاعمقوا، فاصبح وقد لفظته الارض، فقالوا هذا فعل محمد واصحابه نبشوا عن صاحبنا لما هرب منهم. فالقوه فحفروا له، واعمقوا له في الارض ما استطاعوا، فاصبح قد لفظته الارض، فعلموا انه ليس من الناس فالقوه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3617
- Book Index
- 124
Grades
- -
