ஹதீஸ்கள்
#3605
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
சயீத் அல்உமவி (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் (முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில், ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம் அவர்களுடனும் அபூஹுரைரா (ரலி) அவர்களுடனும் இருந்தேன். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், உண்மையாளரும் உண்மையே உரைக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்கள் “குறைஷியரில் சில இளைஞர்க(ளான ஆட்சியாளர்க)ளின் கைகளால்தான் எனது (இன்றைய) சமுதாயத்தின் அழிவு உண்டு” எனக் கூறக் கேட்டேன் என்றார்கள். உடனே மர்வான், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், “இளைஞர்களா?” என்று கேட்க, அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால் நான் அவர்களை, “இன்னாரின் மக்கள், இன்னாரின் மக்கள்' என்று தனித்தனியே பெயர் குறிப்பிட்டுச் சொல்வேன்” என்று பதிலளித்தார்கள்.123 அத்தியாயம் :
حدثنا احمد بن محمد المكي، حدثنا عمرو بن يحيى بن سعيد الاموي، عن جده، قال كنت مع مروان وابي هريرة فسمعت ابا هريرة، يقول سمعت الصادق المصدوق، يقول " هلاك امتي على يدى غلمة من قريش ". فقال مروان غلمة. قال ابو هريرة ان شيت ان اسميهم بني فلان وبني فلان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3605
- Book Index
- 112
Grades
- -
