ஹதீஸ்கள்
#3603
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை,) “விரைவில் (அன்சாரிகளான) உங்களைவிடப் பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில் அல்லது வெற்றி கொள்ளப்படும் நாட்டின் நிதிகளைப் பங்கிடுவதில்) முன்னுரிமை வழங்கப்படும். மேலும் நீங்கள் வெறுக்கின்ற சில காரியங்கள் நடக்கும்.” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் கட்டளையிடு கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உங்கள்மீதுள்ள கடமைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக் குரிய உரிமைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن الاعمش، عن زيد بن وهب، عن ابن مسعود، عن النبي صلى الله عليه وسلم قال " ستكون اثرة وامور تنكرونها ". قالوا يا رسول الله فما تامرنا قال " تودون الحق الذي عليكم، وتسالون الله الذي لكم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3603
- Book Index
- 110
Grades
- -
