ஹதீஸ்கள்
#3596
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (இறுதித் தொழுகை) தொழுவிப்பதைப் போன்று உஹுத் போர் உயிர்த் தியாகிகளுக்காக (இறுதித் தொழுகை) தொழுவித்தார்கள்.114 பிறகு, சொற்பொழிவு மேடைக்குத் திரும்பி வந்து, “(உங்களுக்கு முன்னேற்பாடு களைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே (ஹவ்ளுல் கவ்ஸர் எனும் சொர்க்கத் தடாகத்திற்குச்) செல்கின்றேன். நான் (அப்போது) உங்களுக்குச் சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத் தைக் காண்கிறேன். மேலும், எனக்குப் பூமியின் கருவூலங்களின் திறவு கோல்கள் வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும், நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டிபோடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள்.115 அத்தியாயம் :
حدثني سعيد بن شرحبيل، حدثنا ليث، عن يزيد، عن ابي الخير، عن عقبة بن عامر، ان النبي صلى الله عليه وسلم خرج يوما فصلى على اهل احد صلاته على الميت، ثم انصرف الى المنبر، فقال " اني فرطكم، وانا شهيد عليكم، اني والله لانظر الى حوضي الان، واني قد اعطيت خزاين مفاتيح الارض، واني والله ما اخاف بعدي ان تشركوا، ولكن اخاف ان تنافسوا فيها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3596
- Book Index
- 104
Grades
- -
