ஹதீஸ்கள்
#3594
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் போருக்குச் செல்கின்ற காலம் ஒன்று வரும். அப்போது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர் எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று வினவப்படும். அவர்கள், “ஆம்” என்று பதிலளிப்பார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப் படும். பிறகு அவர்கள் அறப்போர் புரிவார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதருடன் தோழமை கொண்டவர்களுடன் தோழமை கொண்ட வர்கள் எவரேனும் உங்களிடையே இருக்கிறார்களா?” என்று கேட்கப்படும். அவர்கள், “ஆம், இருக்கிறார்கள்” என்று பதிலளிப்பார்கள். உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும்.107 இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا سفيان، عن عمرو، عن جابر، عن ابي سعيد رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " ياتي على الناس زمان يغزون، فيقال فيكم من صحب الرسول صلى الله عليه وسلم فيقولون نعم. فيفتح عليهم، ثم يغزون فيقال لهم هل فيكم من صحب من صحب الرسول صلى الله عليه وسلم فيقولون نعم. فيفتح لهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3594
- Book Index
- 101
Grades
- -
