ஹதீஸ்கள்
#3591
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் சென்றோம். அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் மூன்றாண்டுகள் (மிக நெருக்கமான) தோழமை கொண்டிருந்தேன்.103 என் வாழ்நாளிலேயே அந்த மூன்றாண்டுகளில் ஆசைப்பட்டதைவிட அதிகமாக நபிமொழிகளை நினைவில் வைக்க நான் வேறெப்போதும் ஆசைப்பட்டதில்லை” என்று சொல்லிவிட்டு, தம் கையால் இப்படிச் சைகை செய்து, “நபி (ஸல்) அவர்கள், “உலக இறுதிநாள் வருவதற்கு முன்னால் நீங்கள் முடியாலான காலணி அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தாரோடு போரிடுவீர்கள். அவர்கள் வெட்ட வெளியில் தோன்றி உங்களுடன் போராடு வார்கள்' என்று கூற நான் கேட்டேன்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், “அவர்கள் பாலை வெளியில் வசிப்பவர்கள்” என்று ஒருமுறை கூறினார்கள்.104 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال قال اسماعيل اخبرني قيس، قال اتينا ابا هريرة رضى الله عنه فقال صحبت رسول الله صلى الله عليه وسلم ثلاث سنين لم اكن في سني احرص على ان اعي الحديث مني فيهن سمعته يقول وقال هكذا بيده " بين يدى الساعة تقاتلون قوما نعالهم الشعر، وهو هذا البارز ". وقال سفيان مرة وهم اهل البازر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3591
- Book Index
- 98
Grades
- -
