ஹதீஸ்கள்
#3584
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை அன்று (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு மரம்- அல்லது பேரீச்சமரத்தின்- (அடிப்பாகத்தின்) மீது சாய்ந்தபடி (உரையாற்றிய வண்ணம்) நின்றுகொண்டிருந்தார்கள். அப்போது ஓர் அன்சாரி பெண்மணி- அல்லது ஓர் அன்சாரி தோழர்- “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுக்கு ஒரு சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்து தரலாமா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)” என்று பதிலளித் தார்கள். அவ்வாறே அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குச் சொற்பொழிவு மேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள். ஜுமுஆ நாள் வந்தபோது நபி (ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்திட) சொற்பொழிவு மேடைக்குச் சென்றார்கள். உடனே, அந்தப் பேரீச்ச மரக்கட்டை குழந்தையைப் போல் அழலாயிற்று. பிறகு நபி (ஸல்) அவர்கள் இறங்கிச் சென்று அதைத் தம்மோடு சேர்த்து அணைத்துக்கொண் டார்கள். அது அமைதிப்படுத்தப்படும் குழந்தையைப்போல் தேம்பிய(படி அமைதியாகிவிட்ட)து. நபி (ஸல்) அவர்கள், “தன்மீது (இருந்தபடி உரை நிகழ்த்தும் போது) அது கேட்டுக்கொண்டிருந்த நல்லுபதேசத்தை நினைத்து (“இப்போது நம்மீது அப்படி உபதேச உரைகள் நிகழ்த் தப்படுவதில்லையே' என்று ஏங்கித்தான்) இது அழுதுகொண்டிருந்தது” என்று சொன்னார்கள்.96 அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا عبد الواحد بن ايمن، قال سمعت ابي، عن جابر بن عبد الله رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم كان يقوم يوم الجمعة الى شجرة او نخلة، فقالت امراة من الانصار او رجل يا رسول الله الا نجعل لك منبرا قال " ان شيتم ". فجعلوا له منبرا، فلما كان يوم الجمعة دفع الى المنبر، فصاحت النخلة صياح الصبي، ثم نزل النبي صلى الله عليه وسلم فضمه اليه تين انين الصبي، الذي يسكن، قال " كانت تبكي على ما كانت تسمع من الذكر عندها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3584
- Book Index
- 93
Grades
- -
