ஹதீஸ்கள்
#3582
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது காலத்தில் மதீனாவாசிகளைப் பஞ்சம் பீடித்தது. (அந்தக் காலகட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜுமுஆ நாளில் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்த போது ஒரு (நாட்டுப்புற) மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் அழிந்துவிட்டன; ஆடுகளும் அழிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் நமக்கு மழை பொழிவிக்கட்டும்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், தமது கையை உயர்த்திப் பிரார்த்தனை செய்தார்கள். அப்போது, வானம் (மேகங்கள் இல்லா மல்) கண்ணாடியைப் போன்றிருந்தது. (நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தவுடன்) காற்று ஒன்று வேகமாக வீசி மேகக் கூட்டத்தைத் தோற்றுவித்தது. பிறகு, அந்த மேகக் கூட்டம் ஒன்றுதிரண்டது. பிறகு, வானம் மழையைப் பொழிந்தது. நாங்கள் தண்ணீரில் மூழ்கியபடி (பள்ளிவாசலிலிருந்து) வெளியே வந்து எங்கள் இல்லங் களை அடைந்தோம். அடுத்த ஜுமுஆ (நாள்)வரை எங்களுக்கு மழை பொழிந்து கொண்டேயிருந்தது. ஆகவே, (மழை பெய்விக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்கச் சொன்ன) அந்த மனிதர்- அல்லது வேறொரு மனிதர்- நபி (ஸல்) அவர்கள் முன்னால் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! (அடை மழையின் காரணத்தால்) வீடுகள் இடிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் மழையை நிறுத்தி விடட்டும்” என்று சொன்னார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் புன்னகை புரிந்தவாறு, “(இறைவா!) எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையைப் பொழிவிப்பாயாக! எங்கள்மீது (எங்களுக்குக் கேடு நேரும் விதத்தில்) மழை பொழியச் செய்யாதே!” என்று பிரார்த்தித்தார்கள். பின்னர் நான் மேகத்தை நோக்கினேன். அது (பல துண்டு களாகப்) பிரிந்து மதீனாவைச் சுற்றிலும் ஒரு கிரீடத்தைப் போல் வளையமிட்டி ருந்தது. இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.95 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا حماد، عن عبد العزيز، عن انس، وعن يونس، عن ثابت، عن انس رضى الله عنه قال اصاب اهل المدينة قحط على عهد رسول الله صلى الله عليه وسلم، فبينا هو يخطب يوم جمعة اذ قام رجل فقال يا رسول الله هلكت الكراع، هلكت الشاء، فادع الله يسقينا، فمد يديه ودعا. قال انس وان السماء لمثل الزجاجة فهاجت ريح انشات سحابا ثم اجتمع، ثم ارسلت السماء عزاليها، فخرجنا نخوض الماء حتى اتينا منازلنا، فلم نزل نمطر الى الجمعة الاخرى، فقام اليه ذلك الرجل او غيره فقال يا رسول الله، تهدمت البيوت، فادع الله يحبسه. فتبسم ثم قال " حوالينا ولا علينا ". فنظرت الى السحاب تصدع حول المدينة كانه اكليل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3582
- Book Index
- 91
Grades
- -
