ஹதீஸ்கள்
#3577
ஸஹீஹ் அல்-புகாரீ - Virtues and Merits
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹுதைபியா நிகழ்ச்சியின்போது நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந் தோம்.89 ஹுதைபியா என்பது (மக்காவிó ருந்து மதீனா செல்லும் பாதையில் இருந்த) ஒரு கிணறாகும். நாங்கள் அதிலிருந்து (தண்ணீர்) இறைத்தோம். எந்த அளவுக் கென்றால் அதில் ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட நாங்கள் விட்டுவைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் கிணற்றின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டார்கள். பிறகு சிறிது தண்ணீரை வரவழைத்து வாய் கொப்புளித்தார்கள். பிறகு (தம் வாயிலிருந்த நீரை) கிணற்றுக்குள் உமிழ்ந்தார்கள். நாங்கள் சிறிது நேரம் பொறுத்திருந்தோம். பிறகு நாங்கள் தாகம் தீரும்வரையிலும், எங்கள் வாகனங்கள் தாகம் தீரும் வரையிலும் - அல்லது எங்கள் வாகனங்கள் (தாகம் தீர்ந்து) திரும்பும் வரையிலும் - நாங்கள் (அக்கிணற்றிலிருந்து தண்ணீர்) இறைத்தோம். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Virtues and Merits
- Hadith Index
- #3577
- Book Index
- 86
Grades
- -